மேலும் அறிய

இறந்த தாய் உடலை பெற பிணவறையில் 5 நாட்கள் காத்திருக்கும் மகன்; பிரேத பரிசோதனை கூட செய்யாத காஞ்சிபுரம் மருத்துவமனை

கடந்த 5 நாட்களாக இறந்த தாயின் உடலை வாங்க முடியாமல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பிணவறையில் அருகே செய்வதறியாமல் இளைஞர் ஒருவர் தவித்து வருகிறார்.

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியைச் சார்ந்தவர் வசந்தா. கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி இவர் மீது அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்டார். செங்கல்பட்டில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு மாத காலம் தீவிர சிகிச்சையில் இருந்தார்.

இறந்த தாய் உடலை பெற பிணவறையில் 5 நாட்கள் காத்திருக்கும் மகன்; பிரேத பரிசோதனை கூட செய்யாத காஞ்சிபுரம் மருத்துவமனை
 
தற்போது கொரோனா நோய தொற்று அதிகம் பரவி வருவதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தைக் காட்டி அங்கிருந்து வசந்தாவை வீட்டிற்கு டிசார்ஜ் செய்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த வசந்தா ஓரிரு நாட்களில் உடல் மேலும் நலிவுற்று கடந்த 1ஆம் தேதி மதியம் 3 மணிக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த தாய் உடலை பெற பிணவறையில் 5 நாட்கள் காத்திருக்கும் மகன்; பிரேத பரிசோதனை கூட செய்யாத காஞ்சிபுரம் மருத்துவமனை
 
வசந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து மகனிடம் உரிய முறையில் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையும் கடந்த 5 நாட்களாக அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. காவல்துறை சார்பாக மருத்துவமனையில் இருந்து முறையாக எந்த ஒரு தகவலும் வரவில்லை என கூறுகிறார்கள். அதேசமயம், மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உரிய முறையில் தகவலை ஏற்கனவே அனுப்பிவிட்டதாக கூறுகிறார்கள். வசந்தாவின் மகன் இரவு பகலாக மருத்துவமனை பிணவறையில் வாயிலிலேயே செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
 

இறந்த தாய் உடலை பெற பிணவறையில் 5 நாட்கள் காத்திருக்கும் மகன்; பிரேத பரிசோதனை கூட செய்யாத காஞ்சிபுரம் மருத்துவமனை
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 1ஆம் தேதி எனது தாய் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மதியம் 3 மணிக்கு அனுமதித்தேன். நான் அனுமதித்த சில மணி நேரங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். என் தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்து என்னிடம் ஒப்படைக்க காவல்துறையும் மருத்துவமனை நிர்வாகமும் என்னை மிகவும் அலைக்கழித்து வருகிறார்கள். காவல்துறையினர் என் தாய் விபத்தில்தான் உயிரிழந்தார் என்பதற்கான சான்றிதழை மருத்துவமனையிலிருந்து பெற்று வருமாறு கூறுகின்றனர்.
 
 
அதேசமயம் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கும்பொழுது வசந்தா உயிரிழந்தது தொடர்பாக அனைத்து ஆவணங்களும் காவல்துறையிடம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது எனக் கூறுகிறார்கள். மருத்துவமனை நிர்வாகம் கூறும் தகவலை காவல்துறையிடம் கூறினால் என்னை கடும் சொற்களால் திட்டுகிறார்கள். கடந்த 5 நாட்களாக எனது தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் பிணவறையில் தற்போது வரை வைத்திருக்கிறார்கள்’’ என்று கதறி அழுகிறார். 
கடந்த 5 நாட்களாக இறந்த தாயின் உடலை வாங்க முடியாமல் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்வதறியாமல் இளைஞர் தவித்துவருவது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget