மேலும் அறிய

கடலூரில் சிப்காட்.... விவசாய நிலத்தை அழிக்கும் முடிவை கைவிட வேண்டும்! வேல்முருகன் வலியுறுத்தல்

ஒரு சிப்காட் அமைப்பதற்காக, சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த, தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - வேல்முருகன்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வேளாண் தொழிலை அழித்துவிட்டு, அந்நிலங்களில் சிப்காட் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் பெரும்பாலும் அபாயகரமான ரசாயனங்களைக் கையாளக்கூடிய மிகப்பெரிய நிறுவனங்களே செயல்பட்டு வருகின்றன குறிப்பாகப் பூச்சிக்கொல்லி மருந்து, பெயிண்ட், சாயப்பட்டறை, மருந்து மற்றும் மாத்திரைகள், ரசாயனம், PVC ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

 

சிப்காட் சுற்று வட்டாரப் பகுதியில் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சாமானிய, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய நிலையில் இத் தொழிற்சாலைகளின் செயல்பாட்டால் பல்வேறு விதங்களிலும் இவர்களின் வாழ்வாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

 

5 செப்டம்பர் 2025 அன்று கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின்போது வெளியேறிய மாசு காரணமாக அருகாமைப் பகுதியில் வசிக்கக்கூடிய இரண்டு கர்ப்பிணி பெண்கள் 5 குழந்தைகள் உட்பட சுமார் 93 பேர் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மற்றும் சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள் இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

அருகாமைப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்களோ இத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவினால்தான் கண் எரிச்சல், தொண்டை கரகரப்பு, மூச்சடைப்பு போன்ற உடனடியாக பாதிப்புகள் இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால், தொழிற்சாலையில் இருந்து வெளியேறியது நீராவி மட்டும்தான் வேறு எந்த ரசாயனப் பொருள்களும் இல்லை நீராவி வெளியேறிய குழாயில் இருந்த தூசி நீராவியுடன் கலந்ததால் நிறமாகத் தெரிகிறது என்று தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறியது நீராவியா அல்லது ரசாயனமா என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டிய எந்த அரசுத் துறையும் இது குறித்து பொதுமக்களுக்கு / பொதுவெளியில் விரிவான அறிக்கை வெளியிடவில்லை.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு சிப்காட் அமைப்பதற்காக, குடிகாடு, தியாகவல்லி , நடுத்திட்டு நொச்சிக்காடு ஆகிய பகுதிகளில், சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த, தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

வெட்டிவேர், மணிலா, சவுக்கு, நெற்பயிர்கள், தென்னனை, முந்திரி உள்ளிட்ட பல்வேறு விவசாயத் தொழில்கள் நடந்து வரும் நிலையில், அத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் உள்ளனர். 

இதனை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், பருவநிலை மாற்றம் குறித்து சிந்திக்காமல்,  வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்க முயற்சிப்பது வேதனை அளிக்கிறது.

விவசாயிகளின் விளைநிலம் மட்டுமல்லாது, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளையும் கையகப்படுத்துவதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சிப்காட் நிறுவனங்களால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; நிலத்தடி நீர் மாசுப்பட்டிருக்கிறது; சிப்காட் நிறுவனங்களை சுற்றி உள்ள கிராமங்களில் வேளாண் தொழில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது; பொதுமக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது போன்ற பல்வேறு சிக்கலால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், சிப்காட் நிறுவனங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும், விவசாயிகளும் போராடி வருகின்றனர். 

குறிப்பாக, அச்சுறுத்தி வரும் பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு எதிரான எந்த ஒரு திட்டங்களையோ, நிறுவனங்களையோ விரிவாக்கம் செய்யக்கூடாது என்றும் புதிதாக நிறுவ கூடாது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அறிவியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வரும் சூழலில் வேறு தொழிலுக்கும் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கும்; இதனால் விவசாயிகளின் நிலங்களை விட்டுக் கொடுக்க முடியாது.

எனவே, கடலூர் மாவட்டம் குடிகாடு, தியாகவல்லி ஆகிய பகுதிகளில் சிப்காட் அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இதற்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Embed widget