மேலும் அறிய

பட்டியலின அரசு ஊழியரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் – வழக்குபதிவு செய்ய உத்தரவு

தகராறை சாமதானப்படுத்த முயன்ற அரசு ஊழியரை சாதாரண நபர் சாதிய வன்மத்துடன் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் கிராமத்தில் கோபிநாத் என்பவர் காலில், பட்டியல் இனத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அன்னூர் அடுத்த ஒட்டர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. பட்டியலின சமூகத்தை சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் தண்டல்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவர், தனது சொத்து விவரங்களை சரிபார்க்க கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர்  கலைச்செல்வியிடம் அணுகி விபரங்களை அளித்துள்ளார். அப்போது முறையான ஆவணங்கள் இல்லை எனவும், சரியான ஆவணங்களை கொண்டு வரும்படி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி கூறியதாக தெரிகிறது. இதனால் கோபிநாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், கலைச்செல்வியை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கிர்ந்த வி.ஏ.ஒ உதவியாளர் முத்துசாமி குறுக்கிட்டு அரசு அலுவலரிடம் தவறாக பேச வேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது.



பட்டியலின அரசு ஊழியரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் – வழக்குபதிவு செய்ய உத்தரவு

அப்போது கோபிநாத் முத்துசாமியின் சாதியைச் சொல்லி, தகாத வார்த்தைகளில் பேசி ஊரில் இருக்க முடியாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பணியில் இருக்க வேண்டும் என்றால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில், தனது செல்வாக்கை பயன்படுத்தி வேலையில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த  மிரட்டலுக்கு பயந்த முத்துசாமி அழுதபடி கோபிநாத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். மற்றவர்கள் தடுத்தும் தொடர்ந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். காலில் விழுந்த முத்துசாமியை ’என் மேலையும் தவறு உள்ளது. உன்மேல எனக்கு கோபம் இல்லை. மன்னித்து விட்டேன் எழு. ஒன்னும் பிரச்சனை இல்லை’ என கோபிநாத் சொல்லி உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் அன்னூர் ஓட்டர்பாளையம் வி.ஏ.ஒ அலுவலகத்தில்,பட்டா ஆவணம் சரி பார்க்க வந்த கோபிநாத் என்ற நபர்,பணியில் இருந்த தாழ்த்தப்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்த கிராம உதவியாளரை அச்சுறுத்தியதால் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சிகள் வெளியானது. pic.twitter.com/TqkvCsFYM4

— Gurusamy (@gurusamymathi) August 7, 2021

">

இந்த நிலையில் கோபிநாத் அன்னூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துசாமியை கோபிநாத் சாதியைச் சொல்லி திட்டியதுடன் மன்னிப்பு கேட்குமாறு மிரட்டியதாக கூறப்படும் நிலையில் சாதிய வன்கொடுமை தொடர்பான புகார் எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை. தகராறை சாமதானப்படுத்த முயன்ற அரசு ஊழியரை சாதாரண நபர் சாதிய வன்மத்துடன் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பட்டியலின அரசு ஊழியரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் – வழக்குபதிவு செய்ய உத்தரவு

இச்சம்பவத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோபிநாத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி அன்னூர் பகுதியில் அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பட்டியலினத்தவர் காலில் விழுந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget