மேலும் அறிய

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமனம்

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியின் கீழ் போட்டியிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களை பிடித்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இடம்பிடித்த அனைத்து கட்சிகளும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, வி.சி.க., உள்பட கூட்டணி கட்சியிலும், அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலும் அந்தந்த கட்சியின் சட்டமன்ற தலைவர் யார் என்று ஏற்கனவே முடிவுசெய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.


தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமனம்

ஆனாலும், காங்கிரஸ் கட்சியில் மட்டும் சட்டமன்ற தலைவரை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டது. முதலில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, கடந்த 17-ஆம் தேதி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுவை எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக கு.செல்வப்பெருந்தகையை நியமித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிவிப்பில்,” அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாகாந்தி ஒப்புதலோடு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் துணைத்தலைவராக எஸ்.ராஜேஷ்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமனம்

தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஈரோடு (கிழக்கு), ஊட்டி, விருத்தாச்சலம், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, கிள்ளியூர், தென்காசி, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை மற்றும் விளவங்கோடு ஆகிய 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கடந்த முறை 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக கே.ஆர்.ராமசாமி பொறுப்பு வகித்தார். ஆனால், இந்த முறை சட்டமன்ற தலைவர் பதவிக்கு எம்.எல்.ஏ.க்கள் மூத்த உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற விஜயதாரணி எம்.எல்.ஏ., பிரின்ஸ் உள்பட பலரும் போட்டியிட்டனர். இதன் காரணமாகவே, சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை நியமிப்பதில் இத்தனை நாட்களாக கடும் இழுபறி ஏற்பட்டது. இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற கு.செல்வப்பெருந்தகை சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். செல்வப்பெருந்தகை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு, பல்வேறு கட்சித் தலைவர்களும், கட்சி உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய் ? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய்? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget