மேலும் அறிய

Sasikala Slams EPS: ”சிறுசா இருக்கையில் திருத்திக்கோ..” செங்கோட்டையன் நீக்கம்! எம்.ஜி.ஆர் பாடல் மூலம் ஈபிஎஸை சாடிய சசிகலா

“அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்த செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ள செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று சசிகலா தெரிவித்துள்ளார்

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது சிறுபிள்ளைத்தனமானது என சசிகலா எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிறுப்பிள்ளைத்தனம்:

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்த செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ள செயல் சிறுபிள்ளைத்தனமானது. முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையனின் பதவி பறிப்பு என்பது அறிவார்ந்த செயல் கிடையாது.

அதிமுக – ஒரு மாபெரும் இயக்கம்

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம். எம்ஜிஆர் மற்றும் அம்மா ஆகியோர் இந்த கட்சியை யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்திற்கு கொண்டு வைத்தனர். அம்மாவின் புண்ணியத்தால், நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்ற ஒரு அங்கீகாரம் கிடைத்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரும் பொறாமைப்படும் அளவுக்கு கழகத்தின் செயல்பாடு அமைந்து இருந்தது.

நம் இருபெரும் தலைவர்களும் ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் இயக்கத்தை நடத்தி வந்ததை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட சவால்கள்

எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு நம் கட்சி சந்திக்காத பிளவா? எத்தனையோ பேர் அன்றைக்கு அதிமுகவிற்கு, இனி எதிர்காலம் இல்லை, அதிமுகவின் கதை முடிந்துவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும் இதே கனவோடு தான் அன்றைக்கு இருந்தார். ஆனால் என்ன நடந்தது? கருணாநிதி கண்ட கனவை மொத்தமாக கலைத்தோம்.

பிளவை ஒற்றுமையாக மாற்றிய கலை

இது நம்மால் எப்படி சாத்தியப்பட்டது? ஒரு பிரிந்த கட்சியை எப்படி சேர்ப்பது என்ற கலையை, அன்றே நான் தெளிவாக கற்றுக்கொண்டு விட்டேன். அதாவது, இரு அணிகளாக பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்த பிறகு, அனைவரையும் நம் கட்சிக்காரர் என்று மட்டும் தான் பார்த்தோமே தவிர, இவர் இந்த அணியைச் சேர்ந்தவர், அவர் அந்த அணியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் வேற்றுமைப்படுத்தி ஒரு நாளும் பிரித்து பார்த்ததில்லை. இதை நாங்கள் கற்றுக்கொண்டது எம்.ஜி.ஆரிடம்தான்.

எம்.ஜி.ஆர் அனைத்தையும் கற்று தேர்ந்தவர். ஆனால் ஒன்று மட்டும் அவருக்கு தெரியாது. அது என்னவென்றால், யாரையும் பிரித்து பார்க்கமாட்டார். அனைவரையும் சமமாகவே பார்ப்பார். யாரையும் துண்டாடமாட்டார். இதைத்தான் நாங்கள் அன்றைக்கு கடைப்பிடித்தோம். அதில் வெற்றியும் பெற்றோம்.

திமுகக்கு இடம் கொடுக்கக்கூடாது

திமுக கட்சியை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு நாமே அவர்களுக்கு இடம் அளித்துவிடக்கூடாது. மேலும், திமுகவினரின் சூழ்ச்சிகளுக்கு யாரும் இரையாகிடாமல், கட்சி நலனையும், தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நமது ஒவ்வொரு செயல்களும் இருக்க வேண்டும்.

அதிமுகவின் உண்மையான அடையாளம்

அவர்கள்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான இரத்தத்தின் இரத்தங்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும். இது தான் நமது இருபெரும் தலைவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த பாடம் ஆகும் என அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து; சிறுசா இருக்கையில் திருத்திக்கோ; தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ" என்ற எம்.ஜி.ஆர் பாடல் வரிகளுக்கேற்ப யாராக இருந்தாலும், தாங்கள் செய்கின்ற தவறை திருத்திக்கொள்ள வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒற்றுமையின் அவசியம்

எம்.ஜி.ஆரையும், அம்மாவையும் தங்களுடைய தலைவர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களது கொள்கைகளை பின்பற்றுகின்ற ஒவ்வொரு தொண்டரும் நம் கட்சிக்கு சொந்தக்காரர்கள் தான். அவர்கள் எத்தனை பிரிவுகளாக பிரிந்து நின்றாலும் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, மக்கள் விரோத திமுகவை எதிர்ப்பதுதான்.

தேர்தல் இலக்கு – ஆட்சிமாற்றம்

தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக ஏற்பட வேண்டும். இதற்கு ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஒரே தீர்வு. எனவே, அனைவரையும் ஒன்று படுத்தி இயக்கத்தை கண்டிப்பாக வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லவும், தமிழகத்தில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்பி, தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றிடவும் விரைவில் அனைவரும் ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget