மேலும் அறிய

Rithanya Death: ’’எம்பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இறந்துட்டா..பெருமையா இருக்கு” ரிதன்யாவின் தந்தை பேச்சால் சர்ச்சை!

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதைப் பெருமையாக நினைப்பதாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதைப் பெருமையாக நினைப்பதாக, திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் ரிதன்யாவின் தந்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அருகே அவினாசியில் பின்னலாடை நிறுவன தொழிலதிபர் அண்ணாதுரை. இவரின் மகள் ரிதன்யாவுக்கும் கவின்குமார் என்னும் வரனுக்கும் இரண்டரை மாதங்கள் முன்பு, கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் நடைபெற்றது. 500 பவுன் நகை வரதட்சணையாகக் கேட்கப்பட்டு, 300 பவுன் நகை மணமகள் வீட்டில் அளிக்கப்பட்டது. இதில் மீதி 200 பவுன் நகையைக் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. 

அனுசரித்து வாழும்படி அறிவுரை

இதுகுறித்து ரிதன்யா தன் தந்தையிடம் கூறியபோது, குடும்ப வாழ்க்கையை அனுசரித்து வாழும்படி அறிவுரை கூறியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரிதன்யா, தன் தந்தைக்கு வாட்ஸப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் மகளின் மரணம் குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் ரிதன்யாவின் தந்தை அளித்த பேட்டி:

’’என் பொண்ணு செஞ்ச தவற, இனி உலகத்துல எந்தப் பொண்ணும் தயவுசெஞ்சு செஞ்சிடக் கூடாது. வாழ எத்தனையோ வழிகள் இருக்கு. 25 வயசு வரை காப்பாத்துன அப்பா, அம்மா சாகற வரைக்கும் காப்பாத்தாம உட்ற மாட்டாங்க.

ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இறந்துட்டா

மாற்று வாழ்க்கை அமைக்கறது அவங்க அவங்க மனநிலையைப் பொறுத்தது. எம்பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இறந்துட்டா.. பொண்ணை இழந்தாக் கூட அதுல எனக்கு பெருமையாத்தான் இருக்கு.

எல்லாப் பொண்ணும் அப்படி இருக்கணும்னு நான் நினைக்கல. வாழ வழி இருக்கு. இது தவறான முடிவு. அப்பா, அம்மா ஒத்துக்கலைன்னாலும் அவங்களோட சண்டை போட்டுட்டு, இருங்க. தயவுசெஞ்சு உயிரை மாய்ச்சுக்காதீங்க’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றும் குற்றமோ, அசிங்கமோ அல்ல

இதில், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதைப் பெருமையாக நினைப்பதாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இணையுடன் ஒத்துவரா விட்டால் தனித்து வாழ்தலோ, புரிதல் கொண்ட மற்றொருவரை மறுமணம் செய்வதோ ஒன்றும் குற்றமோ, அசிங்கமோ அல்ல என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
“தமிழ் மொழி குறித்து தவறான பேச்சு, உடனே மன்னிப்பு கேளுங்க” - அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி தலைவர் ஆவேசம்
“தமிழ் மொழி குறித்து தவறான பேச்சு, உடனே மன்னிப்பு கேளுங்க” - அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி தலைவர் ஆவேசம்
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Udumalpet Power Cut: உடுமலைப்பேட்டையில் நாளை (12-08-2026) எங்கெல்லாம் மின்தடை! இதோ லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை (12-08-2026) எங்கெல்லாம் மின்தடை! இதோ லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget