மேலும் அறிய

Rithanya Death: ’’எம்பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இறந்துட்டா..பெருமையா இருக்கு” ரிதன்யாவின் தந்தை பேச்சால் சர்ச்சை!

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதைப் பெருமையாக நினைப்பதாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதைப் பெருமையாக நினைப்பதாக, திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் ரிதன்யாவின் தந்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அருகே அவினாசியில் பின்னலாடை நிறுவன தொழிலதிபர் அண்ணாதுரை. இவரின் மகள் ரிதன்யாவுக்கும் கவின்குமார் என்னும் வரனுக்கும் இரண்டரை மாதங்கள் முன்பு, கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் நடைபெற்றது. 500 பவுன் நகை வரதட்சணையாகக் கேட்கப்பட்டு, 300 பவுன் நகை மணமகள் வீட்டில் அளிக்கப்பட்டது. இதில் மீதி 200 பவுன் நகையைக் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. 

அனுசரித்து வாழும்படி அறிவுரை

இதுகுறித்து ரிதன்யா தன் தந்தையிடம் கூறியபோது, குடும்ப வாழ்க்கையை அனுசரித்து வாழும்படி அறிவுரை கூறியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரிதன்யா, தன் தந்தைக்கு வாட்ஸப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் மகளின் மரணம் குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் ரிதன்யாவின் தந்தை அளித்த பேட்டி:

’’என் பொண்ணு செஞ்ச தவற, இனி உலகத்துல எந்தப் பொண்ணும் தயவுசெஞ்சு செஞ்சிடக் கூடாது. வாழ எத்தனையோ வழிகள் இருக்கு. 25 வயசு வரை காப்பாத்துன அப்பா, அம்மா சாகற வரைக்கும் காப்பாத்தாம உட்ற மாட்டாங்க.

ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இறந்துட்டா

மாற்று வாழ்க்கை அமைக்கறது அவங்க அவங்க மனநிலையைப் பொறுத்தது. எம்பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இறந்துட்டா.. பொண்ணை இழந்தாக் கூட அதுல எனக்கு பெருமையாத்தான் இருக்கு.

எல்லாப் பொண்ணும் அப்படி இருக்கணும்னு நான் நினைக்கல. வாழ வழி இருக்கு. இது தவறான முடிவு. அப்பா, அம்மா ஒத்துக்கலைன்னாலும் அவங்களோட சண்டை போட்டுட்டு, இருங்க. தயவுசெஞ்சு உயிரை மாய்ச்சுக்காதீங்க’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றும் குற்றமோ, அசிங்கமோ அல்ல

இதில், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதைப் பெருமையாக நினைப்பதாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இணையுடன் ஒத்துவரா விட்டால் தனித்து வாழ்தலோ, புரிதல் கொண்ட மற்றொருவரை மறுமணம் செய்வதோ ஒன்றும் குற்றமோ, அசிங்கமோ அல்ல என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

குடும்ப அட்டை e-KYC பதிவு ஜூலை 31, 2026-க்குள் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
குடும்ப அட்டை e-KYC பதிவு ஜூலை 31, 2026-க்குள் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
200-க்கு 199.50 மதிப்பெண்! மீன்வளப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்திய 3 மாணவர்கள்!
200-க்கு 199.50 மதிப்பெண்! மீன்வளப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்திய 3 மாணவர்கள்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget