மேலும் அறிய

கடத்தப்படவிருந்த போதைப்பொருள்.. பொடி வைத்து பிடித்த அதிகாரிகள்.. சென்னை துறைமுகத்தில் பரபர!

சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் கடத்தப்படவிருந்த சூடோ எபிட்ரின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) கடத்தப்படவிருந்த 112 கிலோ சூடோ எபிட்ரின் பறிமுதல் செய்துள்ளது. கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், ஆஸ்திரேலியாவுக்குச் கடத்தப்படவிருந்த சரக்குப் பெட்டகம் ஒன்றை சென்னை துறைமுகத்தில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர்.

100 கிலோவுக்கு மேல் போதைப்பொருள் கடத்த முயற்சி:

அந்த சரக்குப் பெட்டகத்தில் 450 மூட்டைகளில் தலா 50 கிலோ குவார்ட்ஸ் பவுடர் இருந்தது. மூட்டைகளை தனித்தனியாக பரிசோதித்ததில், மொத்தம் 450 மூட்டைகளில் 37 குவார்ட்ஸ் தூள் மூட்டைகளின் அடிப்பகுதியில், தலா 3 கிலோ சூடோ எபிட்ரின் கொண்ட 37 பாக்கெட்டுகள் ஆழமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

112 கிலோ சூடோ எபிட்ரின் போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1985-ம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் (NDPS) சட்டத்தின் கீழ் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை துறைமுகத்தில் பரபரப்பு:

இந்த சோதனையின் போது, குற்றவாளிகள் பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் மற்றும் 3.9 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூடோ எபிட்ரின் போதைப்பொருள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மெத்தாம்பேட்டமைனின் சட்டவிரோத உற்பத்திக்கு முன்னோடியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வழக்கில் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில், மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் பெண் ஒருவரை கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை பொறுத்தவரையில், தங்கக் கடத்தல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தங்கக் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பொருள், வன விலங்குகள், வைரம் ஆகியவற்றின் கடத்தலும் அதிகரித்து விட்டன. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget