மேலும் அறிய

ரேஷன் கார்டுவைத்து இருப்பவர்களா நீங்கள்... e-KYC அப்டேட் பண்ணுக... ஜூன் 30 தான் கடைசி !

ரேஷன் கார்டு e-KYC என்பது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், தங்களுடைய ஆதார் அட்டையைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை சரிபார்க்கும் முறையாகும், சரிபார்க்கப்படாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படலாம்.

ரேஷன் கார்டு e-KYC என்பது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், தங்களுடைய ஆதார் அட்டையைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை சரிபார்க்கும் முறையாகும். இது ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படும் சலுகைகளைப் பெறுவதற்கு முக்கியமானது. சரிபார்க்கப்படாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படலாம், அதனால் e-KYC-ஐ உடனடியாக செய்து முடிப்பது அவசியம். 

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் e-KYC சரிபார்க்கப்பட வேண்டும் 

தமிழகத்தில் உள்ள 2.26 கோடி ரேஷன் கார்டுதாரர்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் விரல் ரேகையை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வெளிநாடுகளுக்கு நிரந்தரமாகச் சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பல குடும்ப அட்டைகளில் இருந்து இன்னும் நீக்கப்படாமல் இருப்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால், அவர்களுக்குரிய உணவுப் பொருட்கள் தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த முறைகேடுகளைத் தடுக்கவும், பயனாளிகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவும், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் கைரேகையையும் 'ஆதார்' சரிபார்ப்பு மூலம் உறுதி செய்யுமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை முனையக் கருவிகள் (பாயின்ட் ஆஃப் சேல் - POS) மூலம் கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

முன்னதாக , இந்த பணியை கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை பல லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர். இந்நிலையில் ரேஷன் கார்டு eKYC-க்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்னும் விரல் ரேகை பதிவு செய்யாத பயனாளர்கள் உடனடியாக தங்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று கைரேகையை பதிவு செய்து, அரசின் இந்த திட்டத்தின் பலனை தொடர்ந்து பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த தேதிக்குள் விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

AAY / PHH-குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் ஊரில் உள்ள நியாய விலைக் கடையில் அல்லது வெளிமாவட்டம் / வெளிமாநிலத்தில் வசிப்பின் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் விரல்ரேகை / கண்கருவிழி சரிபார்ப்பு மூலம் e-KYC மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், காலக்கெடுவுக்குள் உங்கள் ரேஷன் கார்டு eKYC-ஐ முடித்து, உங்கள் ரேஷன் பயன்களைத் தொடர்ந்து பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

e-KYC செய்வது எப்படி?

  1. e-KYC-ஐ ஆன்லைன் மூலமாகவோ அல்லது ரேஷன் கடைகளுக்கு நேரடியாகச் சென்றோ செய்து கொள்ளலாம். 
  2. ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) பயன்படுத்தி சரிபார்க்கலாம். 
  3. விரல் ரேகை அல்லது கருவிழி ஸ்கேன் மூலமாகவும் e-KYC செய்யலாம். 
  4. NPHH (Non-Priority Household) அட்டைகளுக்கு e-KYC தேவையில்லை
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget