அதிர்ச்சி! ஓபிஎஸ்-யை தொடர்ந்து ராமதாஸ் கொடுத்த ஷாக்.. அன்புமணியால் எடுத்த திடீர் முடிவு
அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்.. ஓபிஎஸ்-யை தொடர்ந்து ராமதாஸ் கொடுத்த ஷாக்..

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ராமதாஸ் வாபஸ் பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
உரிமையியல் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு கேட்டுக்கொண்டது. இந்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தது.
முன்னதாக, மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரியும், ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்க கோரியும் ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது அப்போது, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் பாமக விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், மாம்பழ சின்னத்தை முடக்குவது குறித்து தாங்கள் முடிவு எடுக்க முடியாது என்றும் விளக்கமளித்தது.
தந்தை சொல்லை மகன் கேட்பதில்லை
மகன் தந்தை சொல்லை கேட்பதில்லையா என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியபோது, தந்தையின் சொல்லை மகன் கேட்பதில்லை என்று ராமதாஸ் தரப்பு பதிலளித்தது.
உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விட்டு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் ராமதாஸுக்கு எச்சரிக்கை விடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.























