மேலும் அறிய

Agriculture: சம்பா சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை உடனே உயர்த்தி அறிவிங்க.! முதலமைச்சருக்கு சென்ற முக்கிய அறிக்கை

உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு போன்றவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சம்பா சிறப்பு தொகுப்பு நிதியை உடனடியாக அறிவிக்க கோரிக்கை

விவசாயத்திற்கான திட்டங்கள்

விவசாயத்திற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், நெல் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில்  தமிழக அரசு 2023 வரை குறுவை,  சம்பா என சாகுபடி பருவத்தின் அடிப்படையில் சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வந்தது.  இதன் மூலம் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு சுமார் 1,000 ஹெக்டேர் அளவிலான சாகுபடிக்காக, இடுபொருட்கள் மற்றும் நடவு செலவு போன்றவற்றுக்கு உதவும் வகையில் ஒரு விவசாயிக்கு 4,000 ரூபாய் என ஒன்றியத்துக்கு சுமார் 5,000 விவசாயிகள் பயனடைந்து வந்தனர். 2024 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் இந்த திட்டம் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவு படுத்தப்பட்டது.

நிதி நெருக்கடி- சிறப்பு தொகுப்பு நிதி நிறுத்தம்

இந்த நிலையில் நிதி நெருக்கடியை காரணம் காட்டி 2025 ஆம் ஆண்டு குறுவை பருவத்திற்கும் சிறப்பு தொகுப்பு நிதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே விவசாயிகுளக்கு உடனடியாக சம்பா சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு பருவ ஆண்டில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி  7 முறை  நிரம்பியுள்ளது. தொடர்ந்து ஓராண்டு காலமாக முழு கொள்ளளவான 100 அடி நீர் நிரம்பியுள்ளது.  இதனால் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாலும், வடகிழக்கு பருவமழையும் அவ்வப்போது பொழிந்து வருவதாலும் விவசாயிகள் முழு நம்பிக்கையுடன் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். 

சம்பா சிறப்பு தொகுப்பு நிதி- ராமதாஸ் அறிக்கை

இந்த நிலையில் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு, உழவு இயந்திர செலவு உயர்வு போன்றவற்றால் நெல் நடவு செய்வதில் சுணக்கம் காட்டும் விவசாயிகளுக்கு சம்பா சிறப்பு தொகுப்பு நிதி வழங்கினால் பேருதவியாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கும். எனவே, விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக தமிழக அரசு சம்பா சிறப்பு தொகுப்பு நிதியை உடனடியாக அறிவிப்பதுடன், 

இயந்திர நடவு, விவசாய தொழிலாளர்கள் கை நடவு என பாரபட்சம் இல்லாமல் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 7,000 வழங்க வேண்டும். அதேபோல் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் என இல்லாமல் குறைந்தபட்சம் 3 ஏக்கருக்கு இந்த நிதி உதவியை வழங்க வேண்டும். மேலும் குத்தகை விவசாயிகளுகம் பலனடையும் வகையில் சம்பா சிறப்பு திட்டத்தை குத்தகை விவசாயிகளுக்கும் விரிவு படுத்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget