மேலும் அறிய

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் காவலர்கள்.. அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை

புதுச்சேரியில்  போக்குவரத்து விதிமீறல் எனக்கூறி சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை

புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல் எனக்கூறி சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் காவல்துறை தலைமை அலவலகத்தில் உள்ள கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதுவை மாநிலத்தில் தற்போதைய சட்டம் -ஒழுங்கு, கஞ்சா, போதை கும்பல் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்கள் பேசும் போது, புதுவையில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடக்கிறது, சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவுநேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை நிறைவேற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் கொலை வழக்கில் போலீசாருக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும். புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. எனவே அதனை பின்பற்றி தான் ஆக வேண்டும். போக்குவரத்து விதிமீறல் எனக்கூறி சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள். கண்காணிப்பு கேமரா மதுபாருக்கு நேர கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரம் முழுவதும் 180 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget