மேலும் அறிய

பேரிடர் காலத்தில் அதிகாரிகள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

டிட்வா புயல் பாதிப்புகள் தொடர்பாக காரைக்காலில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அவசர ஆய்வு கூட்டத்தில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த 'டிட்வா' புயல் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழையும், அதீத வேகத்திலான காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக, மாவட்டத்தின் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதோடு, கடல் அலைகளின் சீற்றமும் அதிகமாக உள்ளது. மக்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் அவசரத்தை உணர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுடன், மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆட்சியர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்

காரைக்கால் மாவட்டத்தில் புயல் மற்றும் மழையின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமையில் இன்று (நவ-30) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சார் ஆட்சியர் பூஜா, துணை ஆட்சியர்கள் வெங்கடகிருஷ்ணன் (பேரிடர் மேலாண்மை), செந்தில்நாதன் (நிர்வாகம்), தெற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுபம் சுந்தர் கோஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் சந்திரசேகரன், தாசில்தார்கள் செல்லமுத்து, சண்முகானந்தம் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகள், துணை வட்டாட்சியர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மீட்புப் பணிகளின் தற்போதைய கள நிலவரம், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிலை மற்றும் இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

முகாம்களில் தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிக்கு உத்தரவு

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்த ஆட்சியர், பேரிடர் காலத்தில் அதிகாரிகள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தினார். முகாம்களில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்துப் பேசுகையில்:

* முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குப் பால் போன்ற சத்தான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* கழிவறை உள்ளிட்ட அடிப்படை சுகாதார வசதிகள் தொடர்ந்து செயல்பட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

* அனைத்து முகாம்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றித் தொடர்ந்து கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* முகாம்களில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் 100% சுகாதாரமாகவும் தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து வருவாய்த் துறை அதிகாரிகளும் பொதுமக்களுடன் நட்புறவு முறையில் பழகி, இந்தச் சூழ்நிலையில் உற்ற துணையாக இருக்க வேண்டும்.

மேலும், மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்குச் சென்ற படகுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கனமழை எச்சரிக்கை காரணமாக அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மீனவ கிராமங்களில் ஆய்வு மற்றும் அறிவுறுத்தல்

ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஆட்சியர் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் பட்டிணச்சேரி மீனவ கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு மீனவர்களுடன் பேசிய ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினரும், புயல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது எனவும், தங்களது படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மூலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிப் பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். பின்னர் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளின் நிலை குறித்து இருவரும் ஆய்வு செய்தனர்.

உணவின் தரத்தைச் சோதித்த ஆட்சியர்

மீட்பு முகாம்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை நேரில் அறிந்துகொள்ள, நேரு நகர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சத்துணவுக் கூடத்திற்குச் சென்ற ஆட்சியர், உணவு தயாரிக்கும் இடத்தைச் சுகாதார ரீதியாக ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவைச் சுகாதாரமாகவும், தரமாகவும் தயார் செய்து, உரிய காலத்திற்குள் முகாம்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும், சத்துணவுக் கூடத்தில் தயார் செய்யப்பட்ட உணவை ஆட்சியர் சுவைத்துப் பார்த்து, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

தேங்கிய மழை நீர் மற்றும் கடல் அரிப்புக்கு உடனடி தீர்வு

அதைத் தொடர்ந்து, வரிச்சிக்குடி காந்திநகர் பகுதியில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீர் வடிகால்களை ஆட்சியர் ஆய்வு செய்தார். உடனடியாகப் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி மூலம் பம்ப்செட்டுகளைப் பயன்படுத்தி மழை நீரை வெளியேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோன்று, காரைக்கால் மேடு, கோட்டுச்சேரி மேடு, கிளிஞ்சல் மேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களிலும் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீரை உடனடியாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கிளிஞ்சல் மேடு மீனவ கிராம மக்கள், புயல் நேரங்களில் கடல் அரிப்பு ஏற்படுவதால் தங்கள் வீடுகளும் படகுகளும் பாதிக்கப்படுவதாகக் கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்ட ஆட்சியர், உடனடியாகப் பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை மூலம் கற்களைக் கொட்டி கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்களுக்கு உறுதியளித்தார்.

இந்த விரிவான ஆய்வின்போது, சார் ஆட்சியர் பூஜா, துணை மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
TN Rain Alert: நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
TN Rain Alert: நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
Embed widget