மேலும் அறிய

மனு கொடுத்த 30 நிமிடத்தில் விதவை உதவித் தொகை வழங்கி அதிர்ச்சி கொடுத்த கரூர் ஆட்சியர்

’’பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில்  32 பேருக்கு சலவை பெட்டிகளையும், சமூகநலத் துறை சார்பில் மாற்றுத்திறனாளி  கல்லூரி மாணவர்களுக்கு காதொலி கருவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்’’

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திங்கட்கிழமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேரடியாக நடைபெறாத நிலையில் கடந்த 2 மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக மனுக்களை வாங்கிவருகின்றனர். கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நேரடியாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆதரவற்ற விதவை உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் முத்தலாடம்பட்டியைச் சேர்ந்த ஹரமா என்பவருக்கு மனு கொடுத்து 30 நிமிடத்தில் ஆதரவற்ற விதவை உதவித் தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். 


மனு கொடுத்த 30 நிமிடத்தில் விதவை உதவித் தொகை வழங்கி அதிர்ச்சி கொடுத்த கரூர் ஆட்சியர்

மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பகுதியிலிருந்து சலவைத் தொழிலாளர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவரும் இன்று மனு வழங்கினர் மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் இன்று 32 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில்  விலையில்லா தேய்ப்பு பெட்டிகளையும், சமூக நலத் துறை சார்பாக வெண்ணமலை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான  கல்லூரி மாணவர்களுக்கு காதொலி கருவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 

மனு கொடுத்த 30 நிமிடத்தில் விதவை உதவித் தொகை வழங்கி அதிர்ச்சி கொடுத்த கரூர் ஆட்சியர்

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 509 மனுக்கள் பெறப்பட்டது. கடந்த வாரம் வரை கரூர் மாவட்டத்தில் 4,722 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் நிராகரிக்கப்பட்ட மனுக்களை தவிர மீதமுள்ள 3,633 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைத்து மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை பெறப்பட்ட அனைத்து மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, எந்த மனுவும் நிலுவையில் இல்லை என்ற நிலையை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

மனு கொடுத்த 30 நிமிடத்தில் விதவை உதவித் தொகை வழங்கி அதிர்ச்சி கொடுத்த கரூர் ஆட்சியர்

மேலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வதே நமது கடமை என்பதை அனைத்து துறை அலுவலர்களும் நினைவில் வைத்து ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அனைத்துத்தறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை பெற்று தாமதமின்றி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், விதவை பெண் ஒருவருக்கும், அதைத்தொடர்ந்து 32 சலவை தொழிலாளர்களுக்கான சலவை பெட்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், கரூர் கோட்டாட்சியர் மற்றும் துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Embed widget