மேலும் அறிய

தனியார் பஸ் கடத்தல் வழக்கு: பாஜக பிரமுகர் சூர்யா சிவாவிற்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

பாஜக பிரமுகர் ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் திருச்சி எம்.சூர்யா சிவாவிற்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பேருந்தை கடத்தி சென்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள எம்பி சிவா மகன் சூர்யா தினந்தோறும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
எம்பி சிவா மகன் சூர்யா சிவா பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவரது கார் மீது ஜூன் 11-ம் தேதி தனியார் பேருந்து மோதியது. இதில், சேதமடைந்த தனது காரை சீரமைப்பதற்கான செலவுத்தொகையை தனியார் பேருந்து நிறுவனம் வழங்கவில்லை என்றுகூறி, அந்நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு பேருந்தை ஜூன் 19-ம் தேதி கடத்திச் சென்றதாக சூர்யா சிவா மீது கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சூர்யா சிவா, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். 
 
இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சூர்யா தினந்தோறும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
 

மற்றொரு வழக்கு

அகில இந்திய மருத்துவ இட  ஒதுக்கீட்டின் கீழ் பயில்வோருக்கான கட்டாய பணி ஒப்பந்தங்களில் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நெல்லை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற நிலையில், ஒப்பந்த அடிப்படையில் 10 ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் அல்லது இரண்டு கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்" என  கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  "மனுதாரர் கேரளாவைச் சேர்ந்தவர். நெல்லை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறையில் பயில அகில இந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்துள்ளது. 2020 செப்டம்பர் மாதம் படிப்பு முடிந்த நிலையில், படிப்பில் சேரும் போது கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின், அடிப்படையில் 10 ஆண்டுகள் தமிழக அரசுக்கு கீழ்  பணியாற்றவேண்டும்  அல்லது இரண்டு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். மனுதாரர் பணியில் சேர தவறியதால் நெல்லை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கடந்த 2021 செப்டம்பர் 20ஆம் தேதி மனுதாரரை 2 கோடி செலுத்துமாறு கூறியுள்ளார். 

அதுதொடர்பாக மனுதாரர் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லாத நிலையில் இழப்பீடு தொகையை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்யுமாறு மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில், பணியிடம் தொடர்பான கவுன்சிலிங்கில் மனுதாரர் கலந்துகொள்ளவில்லை. தமிழக அரசு ஒப்பந்தத்தை 10 ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாகவும், தொகையை 50 லட்சமாகவும் குறைந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கான கட்டாய பணி ஒப்பந்தங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகையை ஒரேமாதிரியாக நிர்ணயம் செய்ய அறிவுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கட்டாய பணி தொடர்பான ஒப்பந்தங்களில் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியும் மனுதாரர் ஆஜராகவில்லை. மனுதாரருக்கு நாகப்பட்டினத்தில் துணை அறுவை சிகிச்சை மருத்துவராக பணி வழங்கப்பட்டு நல்ல ஊதியம் வழங்கப்பட்டும் மனுதாரர் பணியாற்ற தயாராக இல்லை. மனுதாரர் தரப்பில், மனுதாரர் தமிழ் மொழியில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கட்டாய படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது. மனுதாரர் தொடர்ச்சியாக தமிழகத்தில் பணியாற்ற விரும்பவில்லை, ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற உள்ளார். ஆகவே இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அல்லது அரசு நிர்ணயித்துள்ள 50 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget