"இனிப் பொறுக்க முடியாது..இந்த ஆட்சி மாற வேண்டும்" - தமிழக விவசாயிகளின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?
ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு... தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் கடலூரில் பேட்டி

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் தொகையை கூட தமிழக அரசு வழங்குவது போல கூறி வருவதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டினார்.
கடலூர் செம்மண்டலம் தனியார் ஓட்டலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர் பாண்டியன், “கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு தொகை பெற்றுத் தரவில்லை, பேரிடர் நிதியை ஒதுக்கி தரவேண்டிய திமுக அரசு எந்த சலுகையையும் வழங்கவில்லை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி வழங்காமல் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் கூட பேரழிவு திட்டங்களை செயல்படுத்த முயன்றதே தவிர திமுக அரசு விவசாயிகளுக்கு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, ஹிட்லர் ஆட்சி போல வேளாண்துறை அமைச்சர் செயல்பட்டு உள்ளார். இனி விவசாயிகளின் நலன் காக்க உரிமைகளை காக்க ஆட்சி மாற்றம் தேவை என விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்” என்று பேசினார். மேலும், மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் தொகையை கூட தமிழக அரசு வழங்குவது போல கூறி வருவதாக குற்றம் சாட்டினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















