மேலும் அறிய

இனி, பாஸ்போர்ட்டுக்காக அலைய வேண்டாம்.. வடசென்னைவாசிகளே! உங்களுக்கு காத்திருக்கு சர்ப்ரைஸ்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூரில் விரைவில் அரசு-தனியார் கூட்டு முயற்சியில் புதிய அஞ்சல்துறை பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படவுள்ளது.

சென்னை பெரம்பூரில் விரைவில் அஞ்சல்துறை பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படவுள்ளதாக மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

இனி, பாஸ்போர்ட்க்காக அலைய வேண்டாம்!

வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூரில் விரைவில் அரசு-தனியார் கூட்டு முயற்சியில் புதிய அஞ்சல்துறை பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படவுள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் குறைந்தது ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்வதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

வடசென்னைவாசிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்:

சென்னையில் நேற்று (03.07.2025) செய்தியாளர்களிடம் பேசிய, விஜயகுமார், முன்பைவிட இப்போது கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் இதன்மூலம் பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பாஸ்போர்ட்களை பெறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சாதாரண விண்ணப்பங்களுக்கு தற்போது 30 நாட்களுக்குள்ளும் தட்கல் விண்ணப்பங்களுக்கு 7 நாட்களுக்குள்ளும் பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார். மக்களைத் தேடிச் சென்று பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தின் கீழ் அண்மையில் தொடங்கப்பட்ட நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனங்கள் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து விரைவாக பாஸ்போர்ட் வழங்கப்படும்.

ஒரே மாதத்தில் 1.20 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட்:

வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்த நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெறும் என்ற தகவல்களையும் அவர் வெளியிட்டார். பாஸ்போர்ட் வேன் சேவை முகாம்களில் பங்கேற்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கல்வி நிறுவனங்கள் அதிகமுள்ள ஊர்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகளில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்படுகின்றன என்றும் அதுபோன்ற பகுதிகளில் வரும் நாட்களில் இந்த பாஸ்போர்ட் வேன் சேவை முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தற்போது வழங்கப்படும் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆர்எஃப்ஐடி (RFID) சிப் பொருத்தப்பட்டவை என்றும் இவை விமானநிலையங்களில் குடிபெயர்வு/பாதுகாப்பு சோதனைகளை விரைவாக முடிக்கவும் போலி பாஸ்போர்ட்களை தடுக்கவும் பெரிதும் உதவும் என்று அவர் தெரிவித்தார். ஏற்கனவே வழங்கப்பட்ட சிப் இல்லாத பாஸ்போர்ட்களும் பிப்ரவரி 2028 வரை செல்லுபடியாகும் என்றும் இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாஸ்போர்ட் பெறுவதற்கு பொதுமக்கள் தாங்களாகவே அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவுசெய்யலாம் அல்லது பொது சேவை மையங்களை (சிஎஸ்சி) நாடலாம் என்று குறிப்பிட்ட அவர், தனியார் இணையதள மையங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 2025 முதல் சுமார் 1.20 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், பாஸ்போர்ட் சேவையில் ஏற்படும் குறைகளையும் சந்தேகங்களையும் போக்குவதற்கு பொதுமக்கள் குறைதீர்க்கும் மையம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget