Crime: வேலை தேடும் பெண்களே உஷார்.. கென்யா பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. தேடுதல் வேட்டையில் போலீஸ்..
கென்ய நாட்டு பெண்ணை வரவழைத்து சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய கென்ய வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி கென்ய நாட்டு பெண்ணை வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய கென்ய வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கென்ய நாட்டை சேர்ந்த பெண் கரோலீன்நகுலா(30). இவரது நண்பரான கென்யா நாட்டை சேர்ந்த கனட்டா என்ற வாலிபர் கரோலீனாவிடம் சென்னையில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி சென்னைக்கு அழைத்துள்ளார். அதன்பேரில் கடந்த ஜூன் மாதம் கரோலீனா சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். பின்னர் அண்ணாநகரில் தனது சக நாட்டு பெண்களுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு கரோலீனா நீண்ட நேரம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றி வருவதை பார்த்த கோயம்பேடு ரோந்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கீழ்ப்பாக்கத்தில் தங்கி இருப்பதாக தெரிவித்ததால் அவரை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.
இதனை அடுத்து கீழ்பாக்கம் போலீஸார் கரோலீனாவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் கென்ய நாட்டை சேர்ந்த கனட்டா என்ற வாலிபர் கென்ய நாட்டு பெண்களிடம் சென்னையில் வேலை வாங்கித் தருவதாக கூறி வரவழைத்து பின்னர் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அண்ணாநகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கென்ய பெண்கள் 4 பேரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும் இதனால் அந்த பெண்களுக்கும் கரோலீனாவுக்கும் இடையே தகாரறு ஏற்பட்டதால் அவர் தனது உடமைகளை எடுத்துக்கு கொண்டு சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டி புறப்பட்டு சென்ற அவர் கையில் பணம் இல்லாததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸார் கென்ய பெண் கரோலீன்நகுலாவை வேப்பேரியில் உள்ள தனியார் பெண்கள் விடுதிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கென்ய பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுபடுத்திய கென்ய வாலிபர் கனட்டாவை போலீஸார் தேடி வருகின்றனர்..





















