மேலும் அறிய

Pichavaram Mangrove Forest: கோடைக்கு தயாராகும் பிச்சாவரம் அலையாத்தி வனப்பகுதி; மேம்பாட்டு பணிகள் தீவிரம்

Pichavaram Mangrove Forest: பிச்சாவரத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டம்; ரூ.10 கோடியில் மேம்பாட்டு பணிகள் துவங்கியது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிச்சாவரம் அலையாத்தி சதுப்பு நில வனப்பகுதி. இந்த வனப்பகுதி உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடுகள் ஆகும். இந்த வனம் இரண்டு முக்கியமான நதிகளின் முகத்துவாரமான வடக்கில் வெள்ளாறு சரணாலயத்திற்கும், தெற்கில் கொள்ளிட கரை ஓரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.

கடற்கரையை ஒட்டியுள்ள உப்பனாற்றில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 4 ஆயிரத்து 500 கால்வாய்களுடன் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. சுரபுன்னை மரங்களை கொண்ட இந்த காடுகள் மருத்துவ குணம் கொண்டவையாகும். ஒருபுறம் கடல், இன்னொருபுறம் பச்சைபசேல் என்று படர்ந்து காணப்படும் சுரபுன்னை மரங்கள் என இயற்கை எழில் மிகுந்து காணப்படும்.

இந்நிலையில் பிச்சாவரம் சுற்றுலா மையம் ரூ.10 கோடி மதிப்பில், மேம்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இங்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, படகு சவாரி செய்து, சதுப்புநில காடுகளை பார்வையிட்டுச் செல்கின்றனர். பிச்சாவரத்தில், கடந்த 1984ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், பிச்சாவரம் படகு குழாம் துவக்கப்பட்டது. தற்போது, படகு குழாமில் 15 மோட்டார் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு, ஆண்டுக்கு 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தை, முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. அதற்காக, 10 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, உணவகம், ஓய்வு அறை, பார்வையாளர்கள் கூடம், குழந்தைகள் விளையாட்டு கூடம், வாகன நிறுத்துமிடம், பார்வை கோபுரம், நடைப்பாதை, சுற்றுலா பயணிகள் உணவு அருந்தும் கூடம், பயணிகள் நிழற்குடை, டிக்கெட் கவுண்டர், நிர்வாக அலுவலகம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தற்போது, அடித்தளம் அமைப்பதற்காக (பைல்) போடும் பணி துவங்கி நடந்து வருகிறது. மேம்பாட்டு பணிகள் அடுத்த ஆறு மாதங்களில் முடிந்துவிடும் என, கூறப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் கோடைக்காலம் துவங்க உள்ளதால், பிச்சாவரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். ஏற்கனவே விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர். அவர்களுக்கு போதிய படகு வசதி இல்லாததால், வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்வர். எனவே, கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், படகு சவாரிக்கு கூடுதல் படகுகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Embed widget