மேலும் அறிய

Pichavaram Mangrove Forest: கோடைக்கு தயாராகும் பிச்சாவரம் அலையாத்தி வனப்பகுதி; மேம்பாட்டு பணிகள் தீவிரம்

Pichavaram Mangrove Forest: பிச்சாவரத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டம்; ரூ.10 கோடியில் மேம்பாட்டு பணிகள் துவங்கியது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிச்சாவரம் அலையாத்தி சதுப்பு நில வனப்பகுதி. இந்த வனப்பகுதி உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடுகள் ஆகும். இந்த வனம் இரண்டு முக்கியமான நதிகளின் முகத்துவாரமான வடக்கில் வெள்ளாறு சரணாலயத்திற்கும், தெற்கில் கொள்ளிட கரை ஓரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.

கடற்கரையை ஒட்டியுள்ள உப்பனாற்றில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 4 ஆயிரத்து 500 கால்வாய்களுடன் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. சுரபுன்னை மரங்களை கொண்ட இந்த காடுகள் மருத்துவ குணம் கொண்டவையாகும். ஒருபுறம் கடல், இன்னொருபுறம் பச்சைபசேல் என்று படர்ந்து காணப்படும் சுரபுன்னை மரங்கள் என இயற்கை எழில் மிகுந்து காணப்படும்.

இந்நிலையில் பிச்சாவரம் சுற்றுலா மையம் ரூ.10 கோடி மதிப்பில், மேம்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இங்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, படகு சவாரி செய்து, சதுப்புநில காடுகளை பார்வையிட்டுச் செல்கின்றனர். பிச்சாவரத்தில், கடந்த 1984ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், பிச்சாவரம் படகு குழாம் துவக்கப்பட்டது. தற்போது, படகு குழாமில் 15 மோட்டார் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு, ஆண்டுக்கு 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தை, முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. அதற்காக, 10 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, உணவகம், ஓய்வு அறை, பார்வையாளர்கள் கூடம், குழந்தைகள் விளையாட்டு கூடம், வாகன நிறுத்துமிடம், பார்வை கோபுரம், நடைப்பாதை, சுற்றுலா பயணிகள் உணவு அருந்தும் கூடம், பயணிகள் நிழற்குடை, டிக்கெட் கவுண்டர், நிர்வாக அலுவலகம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தற்போது, அடித்தளம் அமைப்பதற்காக (பைல்) போடும் பணி துவங்கி நடந்து வருகிறது. மேம்பாட்டு பணிகள் அடுத்த ஆறு மாதங்களில் முடிந்துவிடும் என, கூறப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் கோடைக்காலம் துவங்க உள்ளதால், பிச்சாவரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். ஏற்கனவே விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர். அவர்களுக்கு போதிய படகு வசதி இல்லாததால், வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்வர். எனவே, கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், படகு சவாரிக்கு கூடுதல் படகுகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

தலைப்பு செய்திகள்

12-வது வகுப்பு தேர்ச்சி, ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் வேலை: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
12-வது வகுப்பு தேர்ச்சி, ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் வேலை: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
125 நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கான நிதி 4.1% ஆக குறைப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
125 நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கான நிதி 4.1% ஆக குறைப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
Leema Rose Martin: அன்று பர்மா அகதி.. இன்று பணக்கார MLA .. வியக்க வைக்கும் லீமா ரோஸின் பின்னணி!
Leema Rose Martin: அன்று பர்மா அகதி.. இன்று பணக்கார MLA .. வியக்க வைக்கும் லீமா ரோஸின் பின்னணி!
குழந்தைகள், பெண்கள், பொது மக்களின் பாதுகாப்பு கானல் நீராக காட்சியளிக்கிறது - ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் !
குழந்தைகள், பெண்கள், பொது மக்களின் பாதுகாப்பு கானல் நீராக காட்சியளிக்கிறது - ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் !

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Embed widget