![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மீண்டும் மஞ்சப்பையை போலவே மீண்டும் ஓலைக்கொட்டான் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் - அரசுக்கு பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை
’’மீண்டும் தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பினை கையில் எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பனை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்’’
![மீண்டும் மஞ்சப்பையை போலவே மீண்டும் ஓலைக்கொட்டான் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் - அரசுக்கு பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை Palm leave bag campaign should be carried out again like yellow bag - Palm workers demand to the government மீண்டும் மஞ்சப்பையை போலவே மீண்டும் ஓலைக்கொட்டான் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் - அரசுக்கு பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/5f74ca456feaac28878f1afe01c1122c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனை ஓலைக்கொட்டன்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் 4 வகையான பனை ஓலைக்கொட்டன்கள் ஸ்வீட்ஸ் கடைகள், காரம், இனிப்பு கடைகள், இறைச்சி கடைகளுக்கும், வெல்லம் விற்பனை செய்வதற்கும் அதிகளவில் விற்பனை செய்யபட்டு வந்தது. ஸ்வீட்ஸ், காரம், இனிப்பு வகைகளை பனை ஓலைக்கொட்டன்களில் வைப்பத்தினால் அவை எளிதில் கெட்டுப்போகாது என்பதாலும் எளிதில் மக்கக்கூடிய பொருள் என்பதாலும் கடை உரிமையாளர்கள் அதிகளவில் வாங்கி வந்தனர்.
நாகலாபுரத்தில் தயாரிக்கப்படும் பனை ஓலைக்கொட்டன்கள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பபட்டு வந்த நிலையில் பிளாஸ்டிக் ஆதிக்கம் பனை ஓலைக்கொட்டன் தொழிலை முற்றிலுமாக பாதித்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பினை முன்னெடுத்த காரணத்தினால் ஓலை கொட்டன்களுக்கு மவுசு கூடியது மட்டுமின்றி இதனை நம்பி இருந்த தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியாக வேலையும் கிடைத்தது. ஸ்வீட்ஸ், காரம், இனிப்பு கடைகள் மட்டுமின்றி இறைச்சி கடைகளிலும் பனை ஓலைக்கொட்டன்கள் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பனை ஓலைக்கொட்டன்கள் தேவைகள் அதிகரித்த காரணத்தினால் நாகலாபுரம் பகுதியில் இரவு பகலாக பனை ஓலைப்பெட்டிகள் தயாரிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கடந்த 2 ஆண்டுகளாக பனை ஓலைக்கொட்டன்கள் தொழில் முடங்கியது.
தற்பொழுது தமிழக அரசு மீண்டும் பிளாஸ்டிக் ஒழிப்பினை வலியுறுத்தி வருவது மட்டுமின்றி, பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மஞ்சள் பைகளை பயன்படுத்துங்கள் என விழிப்புணர்வு பரப்புரையையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்வீட்ஸ், காரம் கடைகள், பேக்கரி மற்றும் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக்கினை தவிர்த்து, ஓலைக்கொட்டான்களை பயன்படுத்த தமிழக அரசு விளம்பரங்கள் மூலம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளாஸ்டிக் வரவினால் தங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில் விழாக்கள் நடைபெறவில்லை என்பதால் தங்களுது வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மீண்டும் தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பினை கையில் எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)