தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 180 முதல் 200 பாகிஸ்தானியர்கள் வரை இருக்கலாம் என தெரிகிறது. இவர்களை அடையாளம் கண்டு, நாளைக்குள் பாகிஸ்தானுக்கு அனுப்ப தமிழ்நாடு போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை 24 மணி நேரத்தில் வெளியேற்ற தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 180 முதல் 200 பாகிஸ்தானியர்கள் வரை இருக்கலாம் என தெரிகிறது. இவர்களை அடையாளம் கண்டு, நாளைக்குள் பாகிஸ்தானுக்கு அனுப்ப தமிழ்நாடு போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் இத்தனை பாகிஸ்தானியர்களா?
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் மரணம் அடைந்தனர். பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் உடனான அட்டாரி எல்லையை மூட இந்தியா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் உடன் போடப்பட்டிருந்த சிந்து நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு பயணம் செய்ய பாகிஸ்தானியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்திற்குள் வெளியேற்ற நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 180 முதல் 200 பாகிஸ்தானியர்கள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
"மனிதாபிமானத்துடன் நடத்துவோம்"
இதுகுறித்து தமிழ்நாட்டின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மருத்துவ அவசரநிலை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை தவிர, மற்ற அனைவரும் கூடிய விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள். மருத்துவ விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களுடன் வந்திருப்பவர்கள் உடனடியாக திரும்பி செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், மற்ற அனைவரும் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்" என்றார்.
தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரும் பாகிஸ்தானியர்கள், பெரும்பாலும் உயர் சிகிச்சைக்காகவே வருகின்றனர். குறிப்பாக, சென்னை மற்றும் வேலூரில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக உள்ளூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளகாகவும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களைத் தவிர, மற்ற அனைவரும் வெளியேற வேண்டும். மருத்துவ சிகிச்சைக்காக இங்கு இருப்பவர்களை நாங்கள் மனிதாபிமானத்துடன் கையாள்வோம்" என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

