மேலும் அறிய

Omni Bus Strike: சமரசம் இல்லை.. பறிமுதல் தொடரும்.. ஆம்னி உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமைச்சர்..

ஆம்னி பேருந்து வேலைநிறுத்தம் தொடர்பாக இன்று பேருந்து உரிமையாளர்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வார விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி என தொடர் விடுமுறையை ஒட்டி சுமார் 3 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் இன்றுடன் விடுமுறை நாள் முடிவுக்கு வருகிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் இன்று சென்னை திரும்ப உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் வசூளிக்கப்படுவதாக கூறி 102 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்துகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்த்களுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறி இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “ பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதேபோல் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை இங்கு இயக்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. அதையும் மீறி சிலர் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். அதேபோல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் வர இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை எழ கூடாது என்பதற்காக இப்படி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி 102 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவறு இழைத்த பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம் தவறு செய்யாத பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உரிமையாளர்கள் முன்வைத்து வருகின்றனர். அவர்கள் வைக்கும் கோரிக்கையை நாங்கள் பரிசீலனை செய்து வரும் நிலையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெருவார்கள் என நம்பப்படுகிறது. வெளி மாநில பதிவு எண் கொண்டு இயக்கப்பட்ட பேருந்துகள், கூடுதல் கட்டணம், உரிமம் புதிப்பிக்காமல் பேருந்து இயக்கியது தொடர்பாக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பது தான் ஒரே நோக்கம். அதனால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தீபாவளியின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கூறப்பட்டது. அதன்படி தீபாவளி, பொங்கள் பண்டிகையின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதத்தில் மீண்டும் ஒரு சில நிறுவனம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. பொது மக்கள் பாதிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என கூறியுள்ளார். 

Omni Bus Strike: சொந்த ஊரில் இருந்து திரும்பும் மக்களுக்கு அதிர்ச்சி.. இன்று 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது..

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Embed widget