மேலும் அறிய

கரூரில் சிட்கோ கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கரூரில் வெளியேறும் கழிவு நீரால் ஆடு, மாடுகள், மனிதர்களுக்கு பலவிதமான நோய்கள் வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

கரூர் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சிட்கோவில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் சின்ன வடுகபட்டி கிராம ஓடை மற்றும் பட்டா நிலத்தின் வழியாக சென்று ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தில் உள்ள அமராவதி ஆற்றில் கலந்து செல்வதாக சின்ன வடுகப்பட்டி கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கழிவுநீர் வெளியேறும் இடத்தில் மண்ணைக் கொட்டி மூடி உள்ளனர். தகவல் அறிந்து சிட்கோ நிர்வாகம் ஜே.சி.பி வாகனம் மூலமாக கழிவுநீர் வெளியேறும் பகுதியை மூடிய மண்ணை, தோண்டுவதற்காக வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீரென்று போராட்டம் நடத்த துவங்கினர்.

 

கரூரில் சிட்கோ கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

கரூர் மாவட்டத்தில் மக்கள் திடீரென்று போராட்டம்

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் பொழுது விவசாய நிலம் மற்றும்  நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி சிட்கோவில் உள்ள கழிவு நீரை திறந்து விடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆடு, மாடுகள், மனிதர்களுக்கு பலவிதமான நோய்கள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர். தகவலறிந்து, சம்பவ இடத்தில் மண்மங்கலம் வட்டாட்சியர் ராதிகா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கிராம பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 


கரூரில் சிட்கோ கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானமாக செயல்பட்டு வந்த இடத்தை, பெங்களூர் வியாசராயர் மடத்து இடம் என்றும், ஆக்கிரமிப்புகளை மீட்பதாக கூறி அடியாட்களுடன் வந்து கம்பி வேலி அமைக்க வந்தவர்களை பள்ளி முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் பெங்களூர் வியாசராயர் மடத்தைச் சேர்ந்த இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாசராயர் மடத்தைச்  சேர்ந்தவர்கள் அந்த இடத்தை மீட்க மடத்து நிர்வாகிகள், வழக்கறிஞர்கள்  வந்து இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க முயற்சித்தனர். இந்நிலையில் மைதானத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் கம்பி வேலி அமைக்க விடாமல் தடுத்தனர்.


கரூரில் சிட்கோ கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

திடீரென்று மடத்து நிர்வாகிகளுக்கு ஆதரவாக ஐந்துக்கு மேற்பட்ட கார் மற்றும் 10 இருசக்கர வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட அடியாட்கள் திடீரென்று உள்ளே நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது அறிந்த முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடி கம்பிவலி அமைக்க விடாமல் தடுத்து அவர்களை வெளியேறச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேறு வழி இல்லாமல் காரில் வந்தவர்கள்  வசமாக மாட்டிக் கொண்டோம் என்ற அறிந்து உடனடியாக காரிலும், இரு சக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு தப்பித்து விட்டனர். சம்பவ இடத்திற்கு இடத்திற்கு வந்த லாலாப்பேட்டை காவல்துறையினர் இரு தரப்பினரையும்  அனுப்பி வைத்து நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுங்கள் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Cuddalore Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
Cuddalore Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - பச்சிளம் மாணவர்கள் மரணம்
Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - பச்சிளம் மாணவர்கள் மரணம்
IND vS ENG Test: அடிச்சிட்டாங்க சார்.. லார்ட்ஸில் ”வேகமும், பவுன்ஸும்  தூக்கலா இருக்கணும்” இங்கிலாந்து கதறல்
IND vS ENG Test: அடிச்சிட்டாங்க சார்.. லார்ட்ஸில் ”வேகமும், பவுன்ஸும் தூக்கலா இருக்கணும்” இங்கிலாந்து கதறல்
Tamilnadu Roundup: கடலூரில் கோர விபத்து.. எடப்பாடி 2வது நாளாக சுற்றுப்பயணம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: கடலூரில் கோர விபத்து.. எடப்பாடி 2வது நாளாக சுற்றுப்பயணம் - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cuddalore Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
Cuddalore Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - பச்சிளம் மாணவர்கள் மரணம்
Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - பச்சிளம் மாணவர்கள் மரணம்
IND vS ENG Test: அடிச்சிட்டாங்க சார்.. லார்ட்ஸில் ”வேகமும், பவுன்ஸும்  தூக்கலா இருக்கணும்” இங்கிலாந்து கதறல்
IND vS ENG Test: அடிச்சிட்டாங்க சார்.. லார்ட்ஸில் ”வேகமும், பவுன்ஸும் தூக்கலா இருக்கணும்” இங்கிலாந்து கதறல்
Tamilnadu Roundup: கடலூரில் கோர விபத்து.. எடப்பாடி 2வது நாளாக சுற்றுப்பயணம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: கடலூரில் கோர விபத்து.. எடப்பாடி 2வது நாளாக சுற்றுப்பயணம் - தமிழகத்தில் இதுவரை
Trump Tariff: 14 நாடுகளுக்கு பறந்த கடிதம், இந்தியாவின் நிலை என்ன? யாருக்கு எவ்வளவு, 40% ஆ? - ட்ரம்பின் வரி திட்டம்
Trump Tariff: 14 நாடுகளுக்கு பறந்த கடிதம், இந்தியாவின் நிலை என்ன? யாருக்கு எவ்வளவு, 40% ஆ? - ட்ரம்பின் வரி திட்டம்
Tata Scarlet: 2 In 1 - சியாராவே வரல, அதுக்குள்ள குட்டி சியாராவை ரெடியாக்கும் டாடா - தார் காருக்கே சவாலா?
Tata Scarlet: 2 In 1 - சியாராவே வரல, அதுக்குள்ள குட்டி சியாராவை ரெடியாக்கும் டாடா - தார் காருக்கே சவாலா?
TVK Vijay: லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்
TVK Vijay: லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்
ஒரு குடும்பத்தையே அடித்துக் கொன்ற கும்பல், 5 பேர் தீ வைத்து எரிப்பு - நம்ம ஊரில் இப்படியா? காரணம் என்ன?
ஒரு குடும்பத்தையே அடித்துக் கொன்ற கும்பல், 5 பேர் தீ வைத்து எரிப்பு - நம்ம ஊரில் இப்படியா? காரணம் என்ன?
Embed widget