மேலும் அறிய

கரூரில் சிட்கோ கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கரூரில் வெளியேறும் கழிவு நீரால் ஆடு, மாடுகள், மனிதர்களுக்கு பலவிதமான நோய்கள் வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

கரூர் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சிட்கோவில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் சின்ன வடுகபட்டி கிராம ஓடை மற்றும் பட்டா நிலத்தின் வழியாக சென்று ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தில் உள்ள அமராவதி ஆற்றில் கலந்து செல்வதாக சின்ன வடுகப்பட்டி கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கழிவுநீர் வெளியேறும் இடத்தில் மண்ணைக் கொட்டி மூடி உள்ளனர். தகவல் அறிந்து சிட்கோ நிர்வாகம் ஜே.சி.பி வாகனம் மூலமாக கழிவுநீர் வெளியேறும் பகுதியை மூடிய மண்ணை, தோண்டுவதற்காக வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீரென்று போராட்டம் நடத்த துவங்கினர்.

 

கரூரில் சிட்கோ கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

கரூர் மாவட்டத்தில் மக்கள் திடீரென்று போராட்டம்

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் பொழுது விவசாய நிலம் மற்றும்  நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி சிட்கோவில் உள்ள கழிவு நீரை திறந்து விடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆடு, மாடுகள், மனிதர்களுக்கு பலவிதமான நோய்கள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர். தகவலறிந்து, சம்பவ இடத்தில் மண்மங்கலம் வட்டாட்சியர் ராதிகா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கிராம பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 


கரூரில் சிட்கோ கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானமாக செயல்பட்டு வந்த இடத்தை, பெங்களூர் வியாசராயர் மடத்து இடம் என்றும், ஆக்கிரமிப்புகளை மீட்பதாக கூறி அடியாட்களுடன் வந்து கம்பி வேலி அமைக்க வந்தவர்களை பள்ளி முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் பெங்களூர் வியாசராயர் மடத்தைச் சேர்ந்த இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாசராயர் மடத்தைச்  சேர்ந்தவர்கள் அந்த இடத்தை மீட்க மடத்து நிர்வாகிகள், வழக்கறிஞர்கள்  வந்து இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க முயற்சித்தனர். இந்நிலையில் மைதானத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் கம்பி வேலி அமைக்க விடாமல் தடுத்தனர்.


கரூரில் சிட்கோ கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

திடீரென்று மடத்து நிர்வாகிகளுக்கு ஆதரவாக ஐந்துக்கு மேற்பட்ட கார் மற்றும் 10 இருசக்கர வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட அடியாட்கள் திடீரென்று உள்ளே நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது அறிந்த முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடி கம்பிவலி அமைக்க விடாமல் தடுத்து அவர்களை வெளியேறச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேறு வழி இல்லாமல் காரில் வந்தவர்கள்  வசமாக மாட்டிக் கொண்டோம் என்ற அறிந்து உடனடியாக காரிலும், இரு சக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு தப்பித்து விட்டனர். சம்பவ இடத்திற்கு இடத்திற்கு வந்த லாலாப்பேட்டை காவல்துறையினர் இரு தரப்பினரையும்  அனுப்பி வைத்து நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுங்கள் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
Embed widget