மேலும் அறிய

‘நடிகர் விஜயுடன் இணைந்து செயல்படத் தயார்...ஆனால்...’ - சீமான் வைத்த ட்விஸ்ட்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் , அவர் விளம்பரத்திற்காக தினம் தினம் ஏதோ ஒரு கருத்தை கூறி வருகிறார், அவரை நாம் தவிர்க்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்கா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :-

காதில் தேன் ஊற்றும் வேலை

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலும், 2026-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலும் நாம் தமிழர் கட்சிக்கானது. நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது. 55 ஆண்டு கால கட்சிகளுடன் எங்களை ஒப்பிடாதீர்கள். எளியவர்கள் ஒருங்கிணைந்து புரட்சியை உருவாக்கி வருகிறோம். மகளிர் மசோதாவை செயலாக்கம் என்பது பா.ஜ.க.வின் வெறும் பேச்சு தான். கட்சியில் 33 சதவீத ஒதுக்கீடு உள்ளதா? காதில் தேன் ஊற்றும் வேலை தான் இது. மத்திய அரசும், மாநில அரசும் சரியில்லை. மத்திய அரசை குறை கூறும் மாநில அரசு செய்ய வேண்டியதை கூட செய்யவில்லை.

எல்லாம் நாடகம்

நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து வாங்கி வருகிறார்கள். கையெழுத்து வாங்கி முடிவதற்குள் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள். யாரிடம் கொடுப்பது? எல்லாம் நாடகம். தேர்தலுக்கான அரசியல் தான், மக்களுக்கான அரசியல் இல்லை. பிரதமர் வேட்பாளராக தமிழரை பா.ஜ.க. நிறுத்தாது. இந்தியா ஒரு தேசியமா? ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஆனால், தண்ணீர் தர மறுக்கின்றனர். பிறகு எதற்கு ஒரே தேசியம், ஐக்கிய இந்தியா என கூறுங்கள்.

எல்லாவற்றையும் தனியாருக்கு விட்ட பிறகு எதற்கு தேர்தல்? டெண்டர் விட்டு இந்தியாவை கொடுத்து விடுங்கள். இந்த நாட்டில் நம்முடையது என ஏதாவது உள்ளதா? சாலை கூட தனியாரிடம், பிறகு எதற்கு அரசு? ஒன்றிற்கும் இல்லாத அரசுக்கு எதற்கு இவ்வளவு செலவு. வரலாற்றில் யார் பிழை செய்தது. பா.ஜ.க. பெண்களுக்கு எந்த திட்டத்தையும் இதுவரை செயலாக்கம் செய்யவில்லை, வெறும் பேச்சு தான். வங்கி கணக்கில் ரூ.15 லட்சம், 2 கோடி பேருக்கு வேலை என எதுவும் தரவில்லை. தமிழகத்தில் மட்டும் ஏன் திராவிடராக இருக்க வேண்டும்? வலிமைக்கு ஏற்ப அவர்கள் பலத்தை காண்பித்து வருகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் இதுபோன்ற சோதனைகள் நடைபெற்று வருகிறது. திராவிட கட்சிகளை ஒழிக்காமல் எதிர்கொண்டு விஜய் கட்சி ஆரம்பிக்கிறார்.

ஆளுநர் ரவியை தவிர்க்க வேண்டும்

தங்களின் வலிமை காண்பிக்கவே பாஜக அமலாகத்துறை ரெய்டும், திமுக பா.ஜ.க-வினரை கைது செய்வதும் நடைபெறுகிறது, வருகின்ற தேர்தலுக்கான இந்த ரெய்டு கைதெல்லாம் நடைபெறுகிறது என்றும் விளம்பரத்துக்காக பேசும் ஆளுநர் ரவியை தவிர்க்க வேண்டும் தமிழக ஆளுநர் ரவி அடிப்படையில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதால் அவர் விளம்பரத்துக்காக தினம், தினம் ஏதோ ஒரு கருத்தை கூறி வருகிறார். அவரை நாம் தவிர்க்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு 

சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு தான் எடுக்க வேண்டும். முதல்வர் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் என்பது தெரியவில்லை.எந்த காலத்திலும் தேசிய, திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்பது கிடையவே கிடையாது.

நடிகர் விஜய்யுடன் இணைவது உங்களுக்கு மகிழ்ச்சி என்றால், நாங்கள் இரண்டு பேரும் இணைந்து செயல்படத் தயார். அவர் வர வேண்டும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் அவரது கொள்கைகளை சொல்ல வேண்டும், நான் தான் முன்னாடி நிற்கும் அண்ணன், அவர் தான் என்னோடு வருவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும், நான் போய் கேட்க முடியாது, அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவரிடம் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என அவரிடம் கேளுங்கள்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget