மேலும் அறிய

சசிகலா ஆதரவாளர்கள் மீதான கொலை மிரட்டல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - சி.வி.சண்முகம்

எனக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை ஸ்டாலின் அரசு அதனுடைய டிஜிபி, உள்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - சிவி சண்முகம்

கடந்த 2021ம் ஆண்டு ஜீன் மாதம் சசிகலா குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை சிவி சண்முகம் தெரிவித்து இருந்தார். இதனால் சசிகலா மற்றும் அவரது ஆதர்வாளரகள் சி.வி.சண்முகம் அவர்களுக்கு பல முறை கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ரோஷனை காவல் நிலையத்தில் கடந்த 09.06.2021 அன்று புகார் மனு அளித்திருந்தார், இந்த புகார் மனு மீது 25.06.2021 அன்றுகொலை மிரட்டல், அவதூறாக பேசியது, கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்த வழக்கானது கடந்த 10.12.2021 அன்று பொய் புகார் மனு காவல்துறையின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டது, அதற்கான சமன் திண்டிவனம் நீதிமன்றத்தின் மூலமாகவே அனுப்ப வேண்டும் ஆனால் ரோஷனை காவல்துறையினர் 19.03.2023 அன்று சிவி சண்முகத்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி உள்ளனர், 30-03-2023 அன்று அதனை எதிர்த்து திண்டிவனம் நீதிமன்றத்தில் சிவி சண்முகம் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை திண்டிவனம் நீதிமன்றம் 1-இல் நீதிபதி கமலா முன்னிலையில் 06-04-23 அன்று விசாரணைக்கு வந்தது, விசாரணைக்கு பிறகு வழக்கை   12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கமலா உத்தரவிட்டிருந்தார்,  இதனை அடுத்து நேற்றைய தினம் சிவில் சண்முகம் நேரில் ஆஜர் ஆவதற்கான காரணம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது, நிலையில் இன்று மீண்டும் நேரில் ஆஜராகினார்..

செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம் :

சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது காவல்துறை இதுவரை  விசாரிக்காமல் எவ்வித நடவடிக்கையும்  எடுக்காமல் பல்வேறு வகையில் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் கொலை மிரட்டல் விடுப்பது குறித்து பலமுறை  இச்சம்பவம் நடைப்பெற்றது. இதுக்குறித்து திண்டிவனம் ,சென்னை,  காவல் நிலையத்திலும் விழுப்புரத்திலும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த புகார்கள் மீதும் இதுவரை திமுக அரசு அதனுடைய காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஒரு சில புகார்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பினை விளக்கியதற்கான காரணம் என்ன என்று விளக்கம் கேட்டு மீண்டும் கையாளாகாத விடியா அரசு ஆள தெரியாத, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தெரியாத ஸ்டாலின் அரசை நம்பி எதிர்பார்த்து நான் இல்லை, திரும்பவும் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கவும் இல்லை அதற்கான தேவையும் இல்லை பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என வழக்கு தொடுக்கவில்லை.

எனக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை ஸ்டாலின் அரசு அதனுடைய டிஜிபி, உள்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான் தன்னுடைய வழக்கை என்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்ற போது உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் தமிழக காவல்துறை தலைவரை பதில் கொடுக்க உத்தரவு விடுக்கப்பட்டது. இதனால் உத்தரவிடப்பட்டது தொடர்ந்து நான் எங்கெல்லாம் புகார் கொடுத்தேனோ அங்கெல்லாம் புகார்களை வேக வேகமாக முடிக்க முயற்சிக்கிறார்களே தவிர,  ஒரு வழக்கை கூட விசாரிக்கவில்லை இதுவரை 15 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் எந்த  புகார்கள் மீதும், எதிர் தரப்பினர் மீதும் நேரடியாக விசாரிக்கவில்லை என்றார்.

இந்நிலையில் இந்த குறிப்பிட்ட வழக்கு சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள போன் கால்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கொடுக்கப்பட்ட புகார் மீது இதுவரை என்னையும் விசாரிக்கவில்லை, புகார் மீதும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் புகார் மீது விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதாக பொய்யான தகவலை கையாளாகாத ஸ்டாலின் தலைமையிலான காவல்துறை ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை முடித்து வைத்ததாக மனு தாக்கல் செய்துள்ளது.  இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் இந்த புகார் மீதான புகாரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை மறு விசாரணை செய்யப்பட வேண்டும் என சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Sasikala Party Name: அதிமுக, அமமுகவுக்கு எதிராக களமிறங்கும் சசிகலாவின் “அஇபுதமமுக” கட்சி!
Sasikala Party Name: அதிமுக, அமமுகவுக்கு எதிராக களமிறங்கும் சசிகலாவின் “அஇபுதமமுக” கட்சி!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்? - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் அதிரடிப் பதில்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்? - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் அதிரடிப் பதில்!
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Embed widget