மேலும் அறிய

New Pamban Bridge: ரெண்டே நிமிஷம் தான்..! 98 கிமீ வேகம், ரூ.550 கோடி - பாம்பன் பாலம், புயலை தாங்கும் பாதுகாப்பு வசதிகள்

New Pamban Bridge: புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் மீது அதிகபட்சமாக மணிக்கு 98 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.

New Pamban Bridge: புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் மொத்த மதிப்பு சுமார் 550 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

புதிய பாம்பன் பாலம்:

ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலமான பாம்பன் பாலம், ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் மோடியால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. பொறியியல் ஆச்சரியத்தின் உச்சமாக பாராட்டப்படும் இந்த அமைப்பு, நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தவிர்க்க முடியாத மைல்கல்லாக உருவெடுத்துள்ளது. புதிய பாம்பன் பாலம் இந்திய நிலப்பரப்பை தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கிறது.  1,400 டன்களுக்கும் அதிகமான உற்பத்தி, லிஃப்ட் ஸ்பான்கள் மற்றும் 99 கர்டர்களை மேலேற்றுவது, கடலில் பாதை மற்றும் மின்மயமாக்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய பணியின் போது ஒரு அசம்பாவிதங்கள் கூட ஏற்படாதது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.

வடிவமைப்பு விவரம்:

கடந்த 1914ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்த 100 ஆண்டு கால பழமையான பாம்பன் பாலத்திற்கு மாற்றாக தான் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.550 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மண்டபம் ரயில் நிலையம் மற்றும் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாதையில் உள்ள, இந்த பாலத்தின் மொத்த நீளம் 2.078 கிலோ மீட்டராகும். இது நீர் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் 72 மீட்டர் நீளமுள்ள மைய உயர்த்தக்கூடிய அமைப்பை கொண்டுள்ளது. முந்தைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் கூடுதல் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புகளுக்காக அமெரிக்காவில் உள்ள கோல்டன் கேட் பாலம், லண்டனில் உள்ள டவர் பாலம் மற்றும் டென்மார்க் மற்றும் ஸ்வீடனை இணைக்கும் ஓரெசுண்ட் பாலம் ஆகியற்றுடன் இது ஒப்பிடப்படுகிறது.

நிலைத்தன்மைக்கான பொருட்கள்:

பாக் ஜலசந்தியின் உப்புத்தன்மை மற்றும் அரிக்கும் சூழலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாலம், நீண்ட ஆயுளை உறுதி செய்வதற்கும் பராமரிப்புச் செலவுகளைக் குறைப்பதற்கும் கான்கிரீட்டில் உயர்தர துருப்பிடிக்காத எஃகு கலவையை கொண்டுள்ளது. பாலத்தில் பயன்படுத்தப்படும் பாலிசிலோக்சேன் வண்ணப்பூச்சு அதன் ஆரம்ப சேவை வாழ்க்கையை 35 ஆண்டுகளாக நீட்டித்து, கடலோர தேய்மானத்திற்கு நீண்டகால தீர்வை வழங்குகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்:

நில அதிர்வு மற்றும் சூறாவளி எதிர்ப்பு, நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றுடன், இந்தப் பாலம் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதோடு, பிராந்தியத்தில் சுற்றுலா, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளையும் மேம்படுத்துகிறது.. ரயில் கடக்கும்போது, ​​அதிகபட்ச நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக பாலம் இரு முனைகளிலும் பாதுகாப்பாக உயர் வலுவூட்டப்பட்ட கோபுரங்களால் ஆதரிக்கப்படுகிறது.

செங்குத்து லிஃப்ட்:

முன்பு கிடைமட்டமாக  திறக்கக்கூடிய மேனுவல் லிஃப்ட் முறை பயன்பாட்டில் இருந்த நிலையில், புதிய பாலத்தில் ஆட்டோமேடிக் முறையில் செங்குத்தாக உயர்த்தப்படக்கூடிய லிஃப்ட் முறை இணைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட வசதியை கொண்ட நாட்டின் முதல் பாலம் என்பதோடு, பழைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் கூடுதல் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், பாலம் திறக்கப்படாமலேயே சிறிய கப்பல்கள் அதன் வழியாக பயணிக்கலாம். இந்தியாவின் கடலோர மற்றும் நில அதிர்வு நிலைமைகளால் ஏற்படும் சவால்களுடன் அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து, புதிய பாம்பன் பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 98 கிமீ வேகம்:

பழைய பாலத்தின் பழமை மற்றும் பாதிப்புகள் காரணமாக, ரயிலானது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே அதன் மீது பயணிக்க முடியும். ஆனால், புதிய பாலமானது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய ரயிலையும் அனுமதிக்கிறது. இருப்பினும் கூர்மையான வளைவு போன்ற காரணங்களால், தற்போது மணிக்கு அதிகபட்சமாக 98 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே தற்போது பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திலேயே, ரயிலானது ஒட்டுமொத்த பாம்பன் பாலத்தையும் கடந்துவிடும். இது இரண்டு பகுதிகளுக்குமான பயண நேரத்தையும், இணைப்பையும் மேம்படுத்துகிறது.

கூடுதலாக, இந்தப் பாலம் 25 டன் அச்சு சுமை திறன் கொண்ட, கணிசமாக அதிக சுமைகளைத் தாங்கும் திறன் கொண்டது. இது எதிர்காலத்தில் வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget