![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அன்பில் மகேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த நவல்பட்டு விஜி - வழக்கை ரத்து செய்ய கோரி மனு
’’பொது இடங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து அவதூறாக பேசியதாகவும், திமுகவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார்’’
![அன்பில் மகேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த நவல்பட்டு விஜி - வழக்கை ரத்து செய்ய கோரி மனு Naval Pattu Viji who threatened to kill Minister Anbil Mahesh - Petition in Madurai High Court seeking cancellation of the case அன்பில் மகேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த நவல்பட்டு விஜி - வழக்கை ரத்து செய்ய கோரி மனு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/15/0201d408af3c58840f6daa0a2568c4ce_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
![அன்பில் மகேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த நவல்பட்டு விஜி - வழக்கை ரத்து செய்ய கோரி மனு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/19/f1d2253ef464add775eb31dd98bf3129_original.jpg)
மதுரையில் 2020ல் கிராம சபை கூட்டம் நடத்திய திமுக மாவட்ட பொறுப்பு குழு ஜெயராமன் உட்பட 8 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
கடந்த அதிமுக ஆட்சியில் (2020) கிராம சபை கூட்டம் நடந்ததால், அனைத்து ஊராட்சிகளிலும் மக்களை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து தி.மு.க சார்பில் கிராமசபை கூட்டம் நடத்த மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து 2020 ஜனவரியில் மதுரையில் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் கொரோனா வழிகாட்டு விதிகளை மீறியும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் நடத்தப்பட்டதாகக் கூறி மதுரை கரிமேடு போலீசார் திமுகவின் ஜெயராமன் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென மதுரையை சேர்ந்து முத்து கணேசன் மற்றும் ராஜா ஆகிய இருவரும் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், " கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தினால் கொரோனா பரப்பப்பட்டது என்று கூற முடியாது. மேலும் திமுகவினர் நடத்திய கிராம சபை கூட்டத்தில் எந்த சட்ட ஒழுங்கும் பிரச்சனையும் வரவில்லை. இந்த இருவர் தங்களது வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயராமன் உட்பட 8 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிடுகிறது" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)