மேலும் அறிய

நாமக்கல் சிறுமி கொலை வழக்கில் 2வது நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் எனவும், சிறுமியின் பெற்றோர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சக்திநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஜூலை 27 ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது செந்தில் குமார் திடீரென கத்தியால் சிறுமியை வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த சிறுமியின் உறவினர்கள் தங்கராசு, முத்துவேல் ஆகியோரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு முன்பாகவே காவல்துறையினர் செந்தில் குமாரை கைது செய்து மூன்று பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இதற்கு உடந்தையாக இருந்த செந்தில் குமாரின் தாயார் சம்பூரணம் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கொலை வழக்காக மாற்றும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபடுகின்றனர்.

நாமக்கல் சிறுமி கொலை வழக்கில் 2வது நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி தனியார் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக செந்தில் குமார் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். சிறுமி தடுத்து வெளியே வந்த நிலையில் மற்றவர்களிடம் சொல்லிவிடுவார் என்று கொலை செய்துவிட்டதாக கூறி உறவினர்கள் குற்றம் சாட்டினர். செந்தில் குமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இதுபோன்ற செயலில் இனி யாரும் ஈடுபடாமல் இருக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் செந்தில் குமாருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சிறுமியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சிறுமியின் உடலை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனை செய்வதற்கு அனுமதி அளிக்கும்படியும், அதன் பின்னர் சிறுமியின் உறவினர்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் சம்மதம் தெரிவித்து உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்கு அனுமதித்தனர். மேலும் செந்தில் குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வேண்டும். கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் அவ்வாறு வழங்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். 

நாமக்கல் சிறுமி கொலை வழக்கில் 2வது நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

கைது செய்யப்பட்ட செந்தில் குமார் மீது போக்சோ, கொலை வழக்கு உட்பட பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு பிரேத பரிசோதனையானது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நடைபெற்றது. 

இந்த நிலையில், உயிரிழந்த சிறுமிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று லட்சம் இழப்பீடு வழங்கி உள்ள நிலையில், அதனை ரூ.25 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் எனவும், சிறுமியின் பெற்றோர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து சிறுமியின் உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் சேலம் அரச மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tasmac Shop Closed : ஜூன் 5 ஆம் தேதி மதியம் 2 மணி வரை தான் டைம்.! டாஸ்மாக் கடையை மூடனும்- எச்சரிக்கும் மமக
ஜூன் 5 ஆம் தேதி மதியம் 2 மணி வரை தான் டைம்.! டாஸ்மாக் கடையை மூடனும்- எச்சரிக்கும் மமக
TN construction approval : கட்டிடம் கட்ட அனுமதி.! பொதுமக்களுக்கு குஷியான புதிய நடைமுறை- தமிழக அரசு அதிரடி
கட்டிடம் கட்ட அனுமதி.! பொதுமக்களுக்கு குஷியான புதிய நடைமுறை- தமிழக அரசு அதிரடி
TN government employees retired : ஒரே நாளில் அரசு ஊழியர்கள் 5,000 பேர் பணி ஓய்வு.! காலியான 5 லட்சம் பணியிடம்-என்ன செய்யப்போகிறது தவெக அரசு.?
ஒரே நாளில் அரசு ஊழியர்கள் 5,000 பேர் பணி ஓய்வு.! காலியான 5 லட்சம் பணியிடம்-என்ன செய்யப்போகிறது தவெக அரசு.?
ஒரே நாளில் 5,000 பேர் ஓய்வு: 5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்... விரைவில் நிரப்ப வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!
ஒரே நாளில் 5,000 பேர் ஓய்வு: 5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்... விரைவில் நிரப்ப வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Vs TVK: விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை - பகீர் உண்மைகள்
விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை- பகீர் உண்மைகள்
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
Tamilnadu Round Up: எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
IPL 2026 Final: 2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
Safest Family SUVs: சும்மா ஒன்னும் காசு வாங்கல..! குடும்பங்களுக்கு பாதுகாப்புன்னா நாங்க தான் - டாப் 5 எஸ்யுவிக்கள்
Safest Family SUVs: சும்மா ஒன்னும் காசு வாங்கல..! குடும்பங்களுக்கு பாதுகாப்புன்னா நாங்க தான் - டாப் 5 எஸ்யுவிக்கள்
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
Maruti 7 Seater: மஹிந்த்ராவிற்கு போட்டியாக வரும் மாருதியின் 7 சீட்டர் - ஹைப்ரிட், AWD அம்சங்கள், - விலை எப்படி?
மஹிந்த்ராவிற்கு போட்டியாக வரும் மாருதியின் 7 சீட்டர் - ஹைப்ரிட், AWD அம்சங்கள், - விலை எப்படி?
Embed widget