மேலும் அறிய

Sivanga Ship: ரெடி ஆகுங்க! நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை - எப்போது தெரியுமா?

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. இந்தியாவிற்கு மிகவும் நெருக்கமான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து சில மணி நேர பயண தொலைவிலே இலங்கை அமைந்துள்ளது. ஆனால், இரு நாடுகள் இடையே இதுவரை வான்வழி போக்குவரத்து தவிர கடல் வழி பயணிகள் போக்குவரத்து இல்லாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

சிவகங்கை கப்பல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் அதிநவீன வசதிகளுடன் இலங்கைக்கு பயணிக்க உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து புறப்படும் இந்த கப்பல் இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு செல்கிறது.

என்னென்ன வசதிகள்?

இலங்கைக்கு செல்லும் இந்த சிவகங்கை கப்பலில் மொத்தம் 150 இருக்கைகள் உள்ளது. இதில் 123 இருக்கைகள் சாதா வகுப்பு இருக்கைகள் ஆகும். 27 இருக்கைகள் சொகுசு இருக்கைகள் ஆகும்.

இந்த கப்பலில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தண்ணீர், உணவு, அவசர உதவிக்கான மருந்துகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகளும் போதியளவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை உணவாக இட்லி, பொங்கல் பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இட்லி, பொங்கல் தேவைப்படும் பயணிகள் முன்கூட்டியே இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பயணிகளுக்கு தேநீர், காஃபி, சிற்றுண்டிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உயிர்காக்கும் லைஃப் ஜாக்கெட் ஒவ்வொரு பயணிக்கும் வழங்கப்படுகிறது.

எப்போது புறப்படும்?

இலங்கையின் காங்கேசன் துறைமுகம் நோக்கிச் செல்லும் இந்த கப்பல் 16ம் தேதியான நாளை மறுநாள் காலை 10 மணிக்கு புறப்படுகிறது. 4 மணி நேர பயணத்திற்கு பிறகு மதியம் 2 மணிக்கு காங்கேசன் சென்றடையும். அன்று மீண்டும் திரும்பி வரும் சேவை கிடையாது. அடுத்த நாள் காலை 10 மணிக்கு இலங்கையின் காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 2 மணிக்கு வந்து சேர்கிறது.

18ம் தேதியில் இருந்து இந்த கப்பல் சேவை இலங்கை சென்று மீண்டும் தமிழ்நாடு திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18ம் தேதியில் இருந்து காலை 8 மணிக்கு எடுத்து மதியம் 12 மணிக்கு காங்கேசன் செல்கிறது.

காங்கேசன் துறைமுகத்தில் 2 மணிக்கு எடுத்து மாலை 6 மணிக்கு மீண்டும் நாகப்பட்டினம் வந்தடையும். வாரத்தில் 7 நாட்களும் இந்த கப்பல் சேவை இயக்கப்படும். வானிலை ஏதேனும் அசாதாரண சூழல் நிலவினால் மட்டுமே இந்த சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து வானிலை நிலவரத்தை கண்காணிப்பார்கள். இதற்கான கட்டணம் ரூபாய் 5 ஆயிரம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தில் கடைபிடிக்கப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் இந்த பயணத்திலும் கடைபிடிக்கப்பட உள்ளது. ஏற்கனவே நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செரியபாணி என்ற கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், போதியளவு பயணிகள் வராத காரணத்தால் இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhar Update:  ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோVinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhar Update:  ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Emergency Medicine: எமர்ஜென்சி மருந்து பற்றி தெரியுமா? வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மாத்திரைகள் என்ன?
Emergency Medicine: எமர்ஜென்சி மருந்து பற்றி தெரியுமா? வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மாத்திரைகள் என்ன?
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: எச்.ராஜா திட்டவட்டம்!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: எச்.ராஜா திட்டவட்டம்!
அரசியலில் கால்பதிக்க தயாராகும் விவசாயிகள் - காரணம் இதுதான் 
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
Embed widget