![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Rain Alert: அடுத்த 3 மணிநேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு விவரம்..
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கோயம்புத்தூர் திருப்பூர் தேனி தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![TN Rain Alert: அடுத்த 3 மணிநேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு விவரம்.. moderate rains to be expected in 6 distriicts of TAMILNADU for next three hours TN Rain Alert: அடுத்த 3 மணிநேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு விவரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/30/bb906470914d6130e16cc506362944fe1669773565389589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோயம்புத்தூர் திருப்பூர் தேனி தென்காசி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஒரிருஇடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக ,
30.11.2022, 01.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.12.2022, 03.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கன்னிமார் (கன்னியாகுமரி) 12, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி) தலா 9, பூதபாண்டி (கன்னியாகுமரி) 8, சோத்துப்பாறை (தேனி), மஞ்சளார் (தேனி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 7, போடிநாயக்கனூர் (தேனி), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்
தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் நவம்பர் 17 முதல் 23 வரை வடகிழக்கு பருவமழை வெகு குறைவாக இயல்பை விட பதிவாகியுள்ளது.
இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர் ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)