MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
சட்டசபைத் தேர்தல் தோல்வி காரணமாக திமுக-வில் மேற்கொள்ளவிருந்த பல்வேறு முக்கிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒத்திவைக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்சியாக இருப்பது திமுக. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த திமுக-விற்கு தவெக பேரிடியை அளித்தது. குறிப்பாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகள்:
திமுக-வின் இந்த தோல்விக்கு விஜய் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பு மட்டுமின்றி திமுக-வின் மூத்த தலைவர்கள் பலரும் தேர்தல் பணிகளை முறையாக செய்யாததும், உட்கட்சி மோதலும் முக்கிய காரணம் ஆகும். இதன் தாக்கமே வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்த்த பல இடங்களில் திமுக தோல்வி அடைந்ததற்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், திமுக-வை தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அடுத்த தலைமுறைக்கான கட்சியாக திமுக-வை மாற்ற திமுக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் கையில் எடுத்தார். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்த நிலையிலும், மு.க.ஸ்டாலினிடம் 20 மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுசீரமைப்புக்குழு பரிந்துரைத்த நிலையிலும் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்:
அதாவது, மறுசீரமைப்பு நடவடிக்கையை தற்போது மு.க.ஸ்டாலின் ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு பல அதிகாரமிகுந்த மாவட்டச் செயலாளர்களை மாற்றினால் அதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தயக்கம் காட்டி வருகிறார்.
உள்ளாட்சி அளவில் கட்சி ரீதியாக திமுக வலுவாக உள்ள நிலையில், தவெக ஆளுங்கட்சியாக இருப்பதால் இந்த தேர்தலில் திமுக-விற்கு சவால் வலுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த சூழலில், இவர்களை முக்கிய நிர்வாகிகளிடம் இருந்து பொறுப்புகளை பறித்தால் திமுக-வின் வெற்றியை அது கடுமையாக பாதிக்கும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியிடம் வெற்றியை பறிகொடுத்தால் அது திமுக-வை மேலும் பாதிப்படையச் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
காரணம் என்ன?
இதனால், உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை திமுக-வின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் இருக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளார். தேர்தலில் முறையாக பணியாற்றாத பலரையும், சீனியர்கள் பலரையும் ஓரங்கட்டவும் உதயநிதி மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.
தங்களது மாவட்டச் செயலாளர்கள் பறிபோகும் என்ற பீதியிலும், மாவட்டச் செயலாளர்கள் பலரது அதிகாரத்தை 3 தொகுதிகளாக குறைக்கவும் வெளியாகியிருக்கும் முடிவால் சேகர்பாபு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலரும் பீதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Before You Go
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்






















