மேலும் அறிய

வெள்ள பாதிப்புகள் குறித்து பேச தார்மீக உரிமையில்லை - இபிஎஸ் மீது அமைச்சர் சுப்பிரமணியன் விமர்சனம்!

வெள்ள பாதிப்புகள் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமாருக்கு தார்மீக உரிமை இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் மழைக்காலத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் திமுக ஆட்சியை குறை சொல்ல இபிஎஸ் மற்றும் ஜெயகுமாருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார். 

மேற்கு மாம்பலம், அரங்கநாதன் சப்வே அருகில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் காலை 9.30 எம்ஜிஎம் மருத்துவமனை நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் மழைக்கால மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை சைதாப்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த 6 ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 300 நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.  இன்று 357 இடங்களில் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 16516 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 7,83,443 பேர் பயனடைந்துள்ளதாகவும், 2958 பேருக்கு காய்ச்சலும், 1620 பேருக்கு சளி இருமலும் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் 2ஆயிரத்திற்கும் மேல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவனைகளிலும், மருத்துவ முகாம்களிலும் அனைத்து மழைக்கால சிகிச்சைகளுக்கான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.  சித்தா, யுனானி, அலோபதி என அனைத்து வகையிலான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. இன்று 7 தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் மருத்துவ முகாம்களில் பரிசோதனைகளை செய்து பயனடைய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்  வேண்டுகோள் விடுத்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர், ஜனவரியில் இருந்து தற்போது வரை 7662 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். டெங்கு பரவலை தடுக்க கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 1250 முகாம்கள் நடப்பு நிதியாண்டில் நடத்த அறிவிக்கப்பட்டது. அதில் 1083 முகாம்கள் இதுவரை  நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,76,832 பேர் பயனடைந்துள்ளனர். நிவாண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், வெறும் கரன்டியில் பாத்திரம் சுழற்றுவது சுலபம். அதிமுக ஆட்சியில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. நாடாளுமன்றமே 2015 வெள்ளத்தினை Man made flood என்று சொல்லப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஜெயகுமாருக்கும் எந்த தார்மீக உரிமையும் இல்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் சென்னையை பொறுத்தவரை எங்கெல்லாம் மழைநீர் வடிகால் பணிகள் கட்டப்பட்டதோ, அங்கெல்லாம் தண்ணீர் வடிந்துவிட்டது. மழை பெய்த முதல் நாளில் சென்னையின் 4 நீர்நிலைகளான கொசஸ்தலை ஆறு,  அடையாறு, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய்களில் சென்ற மழைநீர் கடலில் உள்வாங்கவில்லை. கடலில் மையம் கொண்டிருந்த புயலால், கடல் சீற்றம் கொண்டிருந்தது. அதன் காரணமாக கடலில் 7 முதல் 8 அடிக்கு அலை உயர்ந்தது, அதன் காரணமாகதான் மழைநீர் கடலில் கலக்கவில்லை. சென்னையில் எங்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது என்று சொன்னால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்” அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget