Tasmac shop: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும்? - அமைச்சர் முத்துசாமி பரபரப்பு தகவல்
டாஸ்மாக் கடைகள் இருக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணம் அல்ல. ஆசை அல்ல. அது, நீண்ட காலமாக இருந்துவிட்டது. உடனடியாக அதனை மாற்றமுடியவில்லை - அமைச்சர் முத்துசாமி

டாஸ்மாக் கடைகளை ஒரேநாளில் தூக்கி எறிந்துவிட முடியாது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
மது விற்பனையால் கொட்டும் வருமானம்
தமிழகத்தில் மது விற்பனை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சுமார் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது. தினமும் மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் மதுபானக்கடைகள் இரவு 10 மணி வரை ஜெகஜோதியாக விற்பனையாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானம் விற்பனையாகிறது. அதிலும பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என விஷேச நாட்களில் 200 கோடியை மதுபான விற்பனையானது தாண்டும். அந்த வகையில கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 800 ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது.
ஒரேநாளில் தூக்கி எறிந்துவிட முடியாது
டாஸ்மாக் கடைகள் மூடுவது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்துள்ளார். அதில், அவர், டாஸ்மாக் கடைகள் இருக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணம் அல்ல. ஆசை அல்ல. அது, நீண்ட காலமாக இருந்துவிட்டது. உடனடியாக அதனை மாற்றமுடியவில்லை என்ற அமைச்சர் படிப்படியாக குறைக்க வேண்டும். அதற்கு பழக்கமானவர்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு வரவேண்டும் என்றார். மேலும், திடீரென ஒரேநாளில் தூக்கி எறிந்துவிட முடியாது. படிப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார் என்றும் கூறினார்.
டாஸ்மாக் பணியாளர்கள் 500 பேர் கைது
இதனிடையே, சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன், ஏஐடியூசி டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் உள்ளிட்ட 500 பணியாளர் கைது செய்யப்பட்டனர்.























