CTR Nirmal Kumar: திமுக ஆட்சியில் மினிஸ்டர் கட்டிங்.. தப்பு யார் பண்ணாலும் ஆக்ஷன் தான்.. நிர்மல்குமார் எச்சரிக்கை!
திமுக ஆட்சியில் சிறையில் நடைபெற்ற மரணங்கள் மூடி மறைக்கப்பட்டது. ஆனால் தவெக அரசில் அதன்மீது வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

சிறை மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் உறுதியாக தெரிவித்துள்ளார்.
சிறை மரணங்களுக்கு வெளிப்படையான நடவடிக்கை
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில், “நாகர்கோயிலில் சிறைக்குள் விசாரணை கைதி சபரி வர்மன் உயிரிழந்த சம்பவம்” பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “கடந்த திமுக ஆட்சியில் சிறையில் நடைபெற்ற மரணங்கள் மூடி மறைக்கப்பட்டது. ஆனால் தவெக அரசில் அதன்மீது வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு நடத்ததாக தெரிய வந்ததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் முந்தைய அரசில் நிகழ்ந்த சிறை மரணங்களுக்கு குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் புழல் சிறையில் கூட ஒரு கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை
தொடர்ந்து பழனி கோயில் நிலம் மோசடி தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிடிஆர் நிர்மல்குமார், “திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறை ஊழலில் திளைத்துள்ளது. இரவு 9 மணி வரையெல்லாம் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. தவெக ஆட்சியில் இந்த துறை முழுவதுமாக சீரமைக்கப்படும். திமுகவில் அமைச்சராக இருந்த மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என வாங்கினார். அதனை வசூலிக்க ஒவ்வொரு அலுவலகத்திற்கு 2 பேர் இருந்தனர்.
Also Read: TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
எனவே போலி பத்திரப்பதிவு குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவெக ஆட்சியில் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் பழனி கோயில் நில விவகாரத்தில் தவெகவினரைச் சேர்ந்த யாருக்கும் தொடர்பில்லை. தவறு எங்கு நடந்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
பாஜகவோடு கைகோர்க்கும் திமுக, அதிமுக
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 2 மாதங்களாக திமுக,அதிமுக பாஜக துணையோடு ஆட்சியமைக்க முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கின்றோம். அடுத்த ஓராண்டில் நடக்கப்போகிறதை சொல்கிறேன். திமுக, அதிமுக கட்சியை நடத்த முடியாமல் பாஜகவுடன் இணையும். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சரவையில் 2 இடங்கள் பெறும் சூழல் அமையும். இப்போதைக்கு இருவருக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு காலத்தை ஓட்டுவதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தவெக எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் பணி சென்றுக் கொண்டிருக்கிறது” என சிடிஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
Before You Go
"வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு" டெலிவரி ஊழியர் ஆபாச செயல் மஃப்டி லேடி போலீஸ் அதிரடி!
ட்ரெண்டிங் செய்திகள்






















