மேலும் அறிய

TN Assembly: சுங்கச் சாவடிகள் வேண்டாம் - மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.. சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு..

4 வழிச்சாலை அமைத்தாலும் மாநில நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைப்பதில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

ஈரோடு -  கோபிச்செட்டிபாளையம் புறவழி சாலை அமைப்பதற்கான சாத்தியகூறுகள் தயார் செய்ய 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முந்தினம் தொடங்கிய கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. முதல் நாள் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் 110 விதியின் கீழ் வரி செலுத்துவது தொடர்பாக சமாதான திட்டத்தை அறிவித்தார். மேலும் 50,000 ரூபாய்க்கு கீழ் வரி நிலுவையில் இருப்பவர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 

மூன்றாவது நாளான இன்று, சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஈரோடு - கோபிசெட்டிபாளையம் சாலை மிக குறுகிய சாலைகளாக இருப்பதாகவும், புறவழி சாலை அமைக்க அதிமுக ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டது என்றும், பணிகள் தற்போது தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? எனவும் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, ஈரோடு கோபிசெட்டிபாளையம் சாலை குறித்து தானும் மிகவும் அறிந்தவன் தான் எனவும், புறவழி சாலை அமைப்பதற்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மொத்தமாக 8.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க சாத்தியகூறுகள் ஆய்வு செய்வதற்காக 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

அதேபோல் 4 வழி சாலை அமைத்தாலும் மாநில நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைப்பதில்லை என அமைச்சர் எ.வா.வேலு குறிப்பிட்டு பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல் மாலையீடு வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது எனவும் ஆம்புலன்ஸ்கள் , கல்லூரி பேருந்துகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அந்த சாலையை 4 வழி சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என புதுக்கோட்டை முத்துராஜா கோரிக்கையை முன் வைத்தார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு , 7 மீட்டர் கொண்ட மாநில சாலையை , 10 மீட்டராக்கி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுகின்றனர். அதில் டோல்கேட் அமைக்கின்றனர் , டோல்கேட்கள் கூடாது என மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து கடிதம் எழுதிவருகிறோம்.

முதல்வர் மாநில நெடுஞ்சாலைகள் திட்டத்தின் கீழ் அனைத்து சாலைகளும் 4 வழி சாலையாக்கப்பட்டு வருகின்றன. 4 வழி சாலை அமைத்தாலும் மாநில நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைப்பதில்லை என தெரிவித்தார்.

நகராட்சி சாலை , மாநில சாலை என இரண்டு விதமான சாலைகள் , நகரப் பகுதியில் இருக்கும் , எனவே உறுப்பினர் கூறும் அந்த சாலையை ஆராய்ந்து போக்குவரத்து செறிவு அதிகம் இருந்தால் 4 வழி சாலையாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ வேலு குறிப்பிட்டு பேசியுள்ளார். 

Madhya Pradesh Election 2023: மத்தியபிரதேசத்தில் முடிவுக்கு வரும் 20 வருட பாஜக ஆட்சி? தேர்தல் முடிவுகளை மாற்றும் பிரச்னைகள்

Mylswamy Annadurai: நாள்தோறும் செயற்கைக்கோள்களை ஏவும் நிலை வரும் - மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget