மேலும் அறிய

ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - மயிலாடுதுறை எஸ்.பி வேண்டுகோள்

ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மயிலாடுதுறை எஸ்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்

மயிலாடுதுறையில் முழு ஊரடங்கை   கடைபிடிக்காத பொதுமக்கள் மீது அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து பொதுமக்கள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒன்றாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - மயிலாடுதுறை எஸ்.பி வேண்டுகோள்

இந்நிலையில் மயிலாடுதுறையில் ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தனர். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் முக்கிய சாலைகள் பேரிகார்டு மூலம் அடைக்கப்பட்டு  தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது  இ- சலான் முறையில் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - மயிலாடுதுறை எஸ்.பி வேண்டுகோள்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா காவல் நிலைய எல்லைப்பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும், இதுவரை ஊரடங்கு உத்தரவு விதி மீறலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 24 இருசக்கர வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வந்த 250 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - மயிலாடுதுறை எஸ்.பி வேண்டுகோள்

ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது நடவடிக்கை எடுப்பது காவல்துறையின் நோக்கமல்ல என்றும், பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து  பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Annamalai: விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - அண்ணாமலை என்ன சொல்கிறார்?
விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - அண்ணாமலை என்ன சொல்கிறார்?
சிலிண்டர் தட்டுப்பாடு.. அம்மா உணவங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுத்திடுக- இபிஎஸ்
சிலிண்டர் தட்டுப்பாடு.. அம்மா உணவங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுத்திடுக- இபிஎஸ்
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
LPG Cylinder Shortage: தமிழகத்தில் கேஸ் தட்டுப்பாடு.. உடனடியாக மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை
தமிழகத்தில் கேஸ் தட்டுப்பாடு.. உடனடியாக மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Embed widget