மேலும் அறிய

ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - மயிலாடுதுறை எஸ்.பி வேண்டுகோள்

ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மயிலாடுதுறை எஸ்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்

மயிலாடுதுறையில் முழு ஊரடங்கை   கடைபிடிக்காத பொதுமக்கள் மீது அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து பொதுமக்கள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒன்றாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - மயிலாடுதுறை எஸ்.பி வேண்டுகோள்

இந்நிலையில் மயிலாடுதுறையில் ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தனர். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் முக்கிய சாலைகள் பேரிகார்டு மூலம் அடைக்கப்பட்டு  தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது  இ- சலான் முறையில் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - மயிலாடுதுறை எஸ்.பி வேண்டுகோள்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா காவல் நிலைய எல்லைப்பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும், இதுவரை ஊரடங்கு உத்தரவு விதி மீறலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 24 இருசக்கர வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வந்த 250 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - மயிலாடுதுறை எஸ்.பி வேண்டுகோள்

ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது நடவடிக்கை எடுப்பது காவல்துறையின் நோக்கமல்ல என்றும், பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து  பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget