மேலும் அறிய

மழையால் மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் நிறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாளடி மற்றும் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 1.70 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இந்தாண்டு பயிரிடப்பட்டிருந்தது. நிலத்தடி நீர் அது மட்டும் இன்றி மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் திறக்கப்பட்ட காவிரி நீர் என தண்ணீர் கை கொடுத்ததன் விளைவாக மாவட்டம் முழுவதும் அதிக அளவில் சம்பா தாளடி பயிர் செய்யப்பட்டுள்ளது. 


மழையால் மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தீவிர தாக்கத்தால் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் மழைநீரில் முழுவதும் மூழ்கி சேதம் ஆனது. அதற்கு அரசு இடுபொருள் நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாயும், இன்சூரன்ஸ் தொகையும் 8,000 ரூபாயும் வழங்கியுள்ளது. மேலும், விவசாயம் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று நடவும் செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 1.40 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர் செய்யப்பட்டு தற்பொழுது அறுவடைக்கு தயாராக உள்ளது. குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பத்து தினங்களாக அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  

Budget 2023 Expectations: மனநலம், டிஜிட்டல் மயம்- பட்ஜெட்டில் கல்வித்துறை எதிர்பார்ப்புகள் என்ன?- ஒரு பார்வை


மழையால் மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மழை காரணமாக தற்போது அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 150 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வரை 90 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே  துவங்கி கொள்முதல் செய்யப்பட்டுகிறது. இந்த சூழலில் கடந்த திங்கட்கிழமை முதல் மாவட்ட முழுமையும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு துவங்கி மயிலாடுதுறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர்.  மேலும்,  மழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

Samatha Citadel First Look: 'சிட்டாடல்' வெப் சீரிஸில் இருந்து விலகினேனா? ஸ்டைலிஷ் ஃபர்ஸ்ட் லுக் மூலம் சமந்தா பதில்


மழையால் மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்

தற்போது 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்து வரும் நிலையில்,  பருவம் தவறி பெய்து வரும் மழை காரணமாக நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 17.77 மில்லிமீட்டர் மழையும், மயிலாடுதுறையில் 13 மில்லிமீட்டர், மணல்மேடு 13 மில்லிமீட்டர், சீர்காழி 19.60 மில்லிமீட்டர், தரங்கம்பாடி 17 மில்லிமீட்டர், செம்பனார்கோயில் 13.60 மில்லிமீட்டர் மழையும், அதிகப்பட்சமாக கொள்ளிடத்தில் 29.40 மில்லிமீட்டர் மழையும், குறைந்த பட்சமாக மயிலாடுதுறை மற்றும் மணல்மேடு பகுதி 13 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Vanni Arasu criticized Annamalai : மரு வைத்த மாறுவேடத்தில் அண்ணாமலை.! கொண்டையை மறைங்க Bro- இறங்கி அடிக்கும் வன்னி அரசு
மரு வைத்த மாறுவேடத்தில் அண்ணாமலை.! கொண்டையை மறைங்க Bro- இறங்கி அடிக்கும் வன்னி அரசு
TNEB CM Vijay : ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
CPI Mutharasan : தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Cooking Oil: சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
CPI Mutharasan : தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
Honda Discounts: ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
TNEB CM Vijay : ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
Embed widget