மேலும் அறிய

பொங்கல் பரிசு தொகுப்பில் நெட்டி மாலைகள்: பிளாஸ்டிக் ஊடுருவலால் அழிவின் விளிம்பில் தமிழர்களின் பாரம்பரியம்..

பிளாஸ்டிக் ஊடுருவலால் அழிவின் விளிம்பில் உள்ள பாரம்பரிய நெட்டி மாலைகளை பொங்கல் தொகுப்பில் வழங்க சீர்காழி உற்பத்தியாளர்கள் அரக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை: தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலவள்ளம் கிராம மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உதவ வேண்டும் என கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். கால்நடைகளுக்கான இயற்கை நெட்டி மாலைகளைப் பொங்கல் தொகுப்பில் சேர்த்து வழங்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

மூன்று தலைமுறைப் பாரம்பரியம்

சீர்காழி தாலுக்கா மேலவள்ளம் கே.கே.நகர் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது முதன்மைத் தொழில் விவசாயக் கூலி வேலை ஆகும். இருப்பினும், ஆண்டுதோறும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மூன்று மாதங்கள் விவசாயப் பணிகள் இல்லாத காரணத்தால், இந்தப் பகுதியில் கடும் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவும். இந்த வறுமையைச் சமாளிக்க, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் 'நெட்டி மாலை' தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் இந்தத் தொழில், தற்போது பிளாஸ்டிக் வரவால் நலிவடைந்து வருகிறது.

கடினமான தயாரிப்பு முறை

ஒரு நெட்டி மாலை உருவாவதற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு ஒளிந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே இதற்கான பணிகள் தொடங்கிவிடுகின்றன.

* மூலப்பொருள் சேகரிப்பு: ஆந்திரா, பாண்டிச்சேரி, பின்னத்தூர் ஏரி மற்றும் வீராணம் ஏரி போன்ற நீர்நிலைகளில் கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி, நெட்டிச் செடிகளைச் சேகரிக்கின்றனர்.

* பதப்படுத்துதல்: சேகரிக்கப்பட்ட செடிகளை வெயிலில் உலர்த்தி, அதன் தண்டுகளைப் (Pith) பிரித்தெடுத்துப் பதப்படுத்துகின்றனர்.

* வண்ணம் தீட்டுதல்: தாழை நார்களைக் கொண்டு கோர்க்கப்படும் இந்த மாலைகளுக்கு, தற்போது விலை உயர்ந்த பட்டச் சாயங்களை வாங்கி வண்ணமயமாக உருவாக்குகின்றனர்.

முக்கியமாக, இந்த மாலைகள் முற்றிலும் இயற்கை சார்ந்தவை என்பதால், கால்நடைகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ எந்தவிதமான ஒவ்வாமையோ, தீங்கோ விளைவிப்பதில்லை.

பிளாஸ்டிக் ஆக்கிரமிப்பும் வாழ்வாதார பாதிப்பும்

சமீபகாலமாகச் சந்தைகளில் மினுமினுக்கும் பிளாஸ்டிக் மாலைகளின் வரத்து அதிகரித்துள்ளது. இயற்கை நெட்டி மாலைகளை விட இவை மலிவாகக் கிடைப்பதாலும், கவர்ச்சியாக இருப்பதாலும் பொதுமக்கள் பிளாஸ்டிக் மாலைகளை நோக்கிச் செல்கின்றனர்.

"நாங்கள் கடன் வாங்கித்தான் மூலப்பொருட்களை வாங்குகிறோம். ஆனால், பிளாஸ்டிக் மாலைகளால் எங்கள் உழைப்புக்கு ஏற்ற விலை கிடைப்பதில்லை. மினுமினுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கால்நடைகளுக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு விளைவிப்பவை என்பதை மக்கள் உணர வேண்டும்," என மேலவள்ளம் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகள்

தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மேலவள்ளம் கிராம மக்கள் தமிழக அரசுக்கு மூன்று முக்கிய கோரிக்கைகளை விடுத்துள்ளனர்:

* பொங்கல் தொகுப்பில் சேர்த்தல்: தமிழக அரசு வழங்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பில், நியாய விலைக்கடைகள் மூலமாக கால்நடை வளர்ப்போருக்கு இந்த இயற்கை நெட்டி மாலைகளை வழங்க வேண்டும்.

* குறைந்த வட்டி கடன்: மூலப்பொருட்கள் வாங்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுதொழில் கடன் வழங்க வேண்டும்.

* பிளாஸ்டிக் விழிப்புணர்வு: கால்நடைகளுக்குத் தீங்கிழைக்கும் பிளாஸ்டிக் மாலைகளைத் தவிர்த்து, பாரம்பரிய நெட்டி மாலைகளைப் பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இயற்கையோடு இணைந்த ஒரு கலை அழியாமல் இருக்கவும், 70 குடும்பங்களின் அடுப்பு தொடர்ந்து எரியவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் மேலவள்ளம் கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தமிழகத்தில் நாளை ( 29.07.26 ) மின் தடையை அறிவித்த மின்சார வாரியம்
தமிழகத்தில் நாளை ( 29.07.26 ) மின் தடையை அறிவித்த மின்சார வாரியம்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
மூத்த மருத்துவர் டி.வி.சாத்தப்பன் மீது அவதூறு போஸ்டர்கள்: இந்திய மருத்துவச்சங்கம் கடும் கண்டனம்
மூத்த மருத்துவர் டி.வி.சாத்தப்பன் மீது அவதூறு போஸ்டர்கள்: இந்திய மருத்துவச்சங்கம் கடும் கண்டனம்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget