Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
திமுக அரசைப் போல வெற்று நாடகங்களை நடத்திக் கொண்டிருக்காமல், காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்வர் விஜய்க்கு வானதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குவதில் காட்டும் வேகத்தை தவெக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதில் காட்ட வேண்டும் என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் அம்மாநில அரசு மிக தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. முந்தைய அதிமுக, திமுக கடுமையாக எதிர்த்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 18ம் தேதி தொடங்கியது.
இதனிடையே நேற்று (ஜூன் 19) முதலமைச்சர் விஜய் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவிக்க அவர் ஒருமனதாக நிறைவேறியது.
வானதி சொன்னது என்ன?
இதனிடையே பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “சோனியா, ராகுல், கார்கேவை சந்தித்து மேகதாதுவில் கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்டுவதை முதலமைச்சர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குவதில் காட்டும் வேகத்தை இதில் காட்ட வேண்டுமெனவும் முதலமைச்சர் விஜயை விளாசியிருந்தார்.
கடந்த கால திமுக அரசைப் போல வெற்று நாடகங்களை நடத்திக் கொண்டிருக்காமல், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மாறாக திமுகவைப் போல கர்நாடக காங்கிரஸ் அரசிடம் மென்மையான போக்கை கையாண்டால் வரலாறு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை ஒருபோதும் மன்னிக்காது” என கூறியிருந்தார்.
மாணிக்கம் தாகூர் பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், “மேகதாது விவகாரத்தில் காங்கிரஸை கேள்வி கேட்பவர்கள் முதலில் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.கர்நாடக பாஜக தலைவர்கள் தொடர்ந்து மேகதாது அணைக்கு ஆதரவாக பேசும்போது, பிரதமர் மோடி, அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோர் ஏன் அவர்களை தடுக்கவில்லை? ஏன் ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை?தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் சமரசம் செய்யாது.மக்களின் நலன்தான் எங்களுக்கு முதன்மை. மேகதாது விவகாரத்திலும் அதே நிலைப்பாடுதான். விலைக்கு எம்எல்ஏக்களையும், எம்பிக்களையும் வாங்குவது பாஜகவின் பிறப்புரிமை என்று நம்புபவர்களுக்கு எல்லாமே அதே கண்ணோட்டத்தில்தான் தெரியும்” என தெரிவித்துள்ளார்.
Before You Go
நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
ட்ரெண்டிங் செய்திகள்






















