மேலும் அறிய

மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை மனுவை நிராகரித்த மத்திய அரசின் உத்தரவு ரத்து

’’மாற்றுத்திறனாளிகள் ஆணையர் நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்துள்ளது, உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று எனது விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்ததுள்ளதாக மனுவில் புகார்’’

நாகர்கோவில் குருசடியைச் சேர்ந்த கே.பரந்தாமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் 100% மாற்றுத்திறனாளி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். மாற்றுத்திறனாளிகள் கார் வாங்க ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் ஆணைய நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

இந்த உத்தரவின் அடிப்படையில் எனக்கு கார் வாங்க ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டண விலக்கு கேட்டு மத்திய அரசுக்கு விண்ணப்பித்தேன். ஆனால், எலும்பியல் தொடர்பான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் ஆணையர் நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்துள்ளது, உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று எனது விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு கார் வாங்க ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டண சலுகை அளிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், மாற்றுத்திறனாளிகள் வாகனம் வாங்க சலுகை அளிக்கும் பரிந்துரைகள் தற்போது ஏற்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் விண்ணப்பத்தை பரிசீலித்து 31.1.2022-க்குள் உரிய அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.


 
தனியார் நிலத்தில் குவாரிக்கு அனுமதி வாங்கி அரசு நிலத்தில் கிராவல் மண் எடுத்த விவகாரம் - மதுரை ஆட்சியர் பதில் தர உத்தரவு
 
மதுரை மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் மேலூர் தாலுகா, கீரனூர் கிராமத்தில் கிராவல் மண் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 90 நாட்கள் வரை கிராவல் மண் சுமார் 1.5 மீட்டர் ஆழம் வரை குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
 
ஆனால், தற்போது சுமார் 5 மீட்டர் வரை ஆழத்திற்கு குவாரி அமைத்து கிராவல் மண் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள அரசு நிலத்திலும் கிராவல் மண் எடுக்கப்பட்டுள்ளது. கிராவல் மணல் எடுக்க அனுமதி கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி உடன் முடிவடைந்தது. ஆனால் அரசு அனுமதித்த நாட்களைவிட அதிக நாட்கள் குவாரி அமைத்து கிராவல் மண்ணை எடுத்துள்ளனர். இது முற்றிலும் சட்ட விரோதமான செயலாகும். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 
 
எனவே, மேலூர் தாலுகா கீரனூரில் தனியார் நிலத்தில் குவாரி அமைக்க அனுமதி பெற்று அரசு நிலத்தில் சட்டவிரோத குவாரி அமைத்து கிராவல் மண் எடுத்துவரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், குவாரி அமைக்க அரசு அனுமதித்த அளவு மற்றும் தற்போது எந்த அளவிற்கு குவாரியில் மணல் எடுக்கப்பட்டுள்ளது எனபது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget