மேலும் அறிய
பொது இடங்களில் மது அருந்த தடை..? தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்ட பின் பொது இடங்களில் மது அருந்த தடை கோரிய வழக்கு தொடர்பாக தமிழ்நாசு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள்
டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்ட பின் பொது இடங்களில் மது அருந்த தடை கோரிய வழக்கு தொடர்பாக தமிழ்நாசு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுக்கடைகள், பார்கள் மூடிய பின் பலர் பொது இடங்களில் அமர்ந்து குடிப்பதாகவும் இதனால் குற்றங்கள் நடப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டது. விதிகள் அனுமதிப்பதால் காலை 8 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரை பார்களை திறக்க அனுமதிக்கலாம் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 4ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















