மேலும் அறிய

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியதா நீதிமன்றம்? முழு விவரம்

அக்டோபர் 2ஆம் தேதி அணுவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு விழா, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழ்நாட்டின் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம்  கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது எந்த  முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும்,  அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், ஆர்எஸ்எஸ் சீருடையுடன் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் செல்ல தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு  நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில்  எந்த பாதையில் செல்கிறார்கள் என தகவல்கள் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு, ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது என்றும், காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 

சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவை தொடர்பான எந்த உறுதியையும், மனுதாரர்கள் தரப்பில் காவல்துறையிடம் தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஊர்வலம் செல்லும் வழியில் மதம் சார்ந்த பதற்றமான பகுதிகள் இருக்கலாம் என்பதால், அவர்கள் செல்லும் வழியை துல்லியமாக தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தால், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் எனவும் கவால்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊர்வலத்தை காவல்துறை ஒழுங்குபடுத்தலாம் என்றும், ஆனால் அனுமதி மறுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் கடந்த காலத்திலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டதாகவும், இதுவரை எந்த ஒரு பிரச்னையும் ஏற்படவில்லை என்றும், புதுச்சேரியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே ஞாயிறன்று ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல என்றும், நாங்கள் சட்டத்தை மதிக்கக்கூடியவர்கள் என்பதால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குறிப்பிட்ட ஒரு இடம் என்று குறிப்பிடாமல், மாநிலம் முழுவதும் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்பதால், காவல்துறை தரப்பில் முடிவெடுக்க தாமதம் ஆவதாக தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு  செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், 8 மாவட்டங்களில் இன்று கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், 8 மாவட்டங்களில் இன்று கனமழை - தமிழக வானிலை அறிக்கை
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
வாகன ஓட்டிகளே உஷார் !! ஜூன் 1 - முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வா ? டோல்கேட் கட்டண உயர்வு
வாகன ஓட்டிகளே உஷார் !! ஜூன் 1 - முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வா ? டோல்கேட் கட்டண உயர்வு
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், 8 மாவட்டங்களில் இன்று கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், 8 மாவட்டங்களில் இன்று கனமழை - தமிழக வானிலை அறிக்கை
IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
வாகன ஓட்டிகளே உஷார் !! ஜூன் 1 - முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வா ? டோல்கேட் கட்டண உயர்வு
வாகன ஓட்டிகளே உஷார் !! ஜூன் 1 - முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வா ? டோல்கேட் கட்டண உயர்வு
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
Embed widget