மேலும் அறிய

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியதா நீதிமன்றம்? முழு விவரம்

அக்டோபர் 2ஆம் தேதி அணுவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு விழா, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழ்நாட்டின் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம்  கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது எந்த  முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும்,  அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், ஆர்எஸ்எஸ் சீருடையுடன் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் செல்ல தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு  நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில்  எந்த பாதையில் செல்கிறார்கள் என தகவல்கள் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு, ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது என்றும், காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 

சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவை தொடர்பான எந்த உறுதியையும், மனுதாரர்கள் தரப்பில் காவல்துறையிடம் தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஊர்வலம் செல்லும் வழியில் மதம் சார்ந்த பதற்றமான பகுதிகள் இருக்கலாம் என்பதால், அவர்கள் செல்லும் வழியை துல்லியமாக தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தால், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் எனவும் கவால்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊர்வலத்தை காவல்துறை ஒழுங்குபடுத்தலாம் என்றும், ஆனால் அனுமதி மறுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் கடந்த காலத்திலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டதாகவும், இதுவரை எந்த ஒரு பிரச்னையும் ஏற்படவில்லை என்றும், புதுச்சேரியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே ஞாயிறன்று ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல என்றும், நாங்கள் சட்டத்தை மதிக்கக்கூடியவர்கள் என்பதால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குறிப்பிட்ட ஒரு இடம் என்று குறிப்பிடாமல், மாநிலம் முழுவதும் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்பதால், காவல்துறை தரப்பில் முடிவெடுக்க தாமதம் ஆவதாக தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு  செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெரும் பரபரப்பு! மயக்கம் போட்டு கீழே விழுந்த விஜயகாந்த் மகன் - தொண்டர்கள் அதிர்ச்சி
பெரும் பரபரப்பு! மயக்கம் போட்டு கீழே விழுந்த விஜயகாந்த் மகன் - தொண்டர்கள் அதிர்ச்சி
பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. தேனியில் பரபரப்பு.. இரண்டாவது நாளாக தேடல் பணி தீவிரம்!
பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. தேனியில் பரபரப்பு.. இரண்டாவது நாளாக தேடல் பணி தீவிரம்!
IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!
IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!
Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்
Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nagarjuna convention demolition | தரைமட்டமான மண்டபம்! சோகத்தில் நாகர்ஜூனா! நடந்தது என்ன?Kanimozhi | ’’TOUR கூட்டிட்டு போறீங்களா?’’ஆசையாய் கேட்ட மாணவி..நிறைவேற்றிய கனிமொழிVarun Kumar IPS|‘’உனக்கு அம்மா, தங்கச்சி இருக்குல’’வெளுத்து வாங்கிய வருண் IPSஆபாசமாக பதிவிட்ட மாணவன்Mayiladuthurai Police VS DMK | போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரும் பரபரப்பு! மயக்கம் போட்டு கீழே விழுந்த விஜயகாந்த் மகன் - தொண்டர்கள் அதிர்ச்சி
பெரும் பரபரப்பு! மயக்கம் போட்டு கீழே விழுந்த விஜயகாந்த் மகன் - தொண்டர்கள் அதிர்ச்சி
பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. தேனியில் பரபரப்பு.. இரண்டாவது நாளாக தேடல் பணி தீவிரம்!
பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. தேனியில் பரபரப்பு.. இரண்டாவது நாளாக தேடல் பணி தீவிரம்!
IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!
IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!
Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்
Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்
Breaking News LIVE: பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியது அண்ணா பல்கலை
Breaking News LIVE: பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியது அண்ணா பல்கலை
Krishna Jayanthi 2024: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தயாரான இஸ்கான் கோயில்! பக்தர்களுக்கு அழைப்பு!
Krishna Jayanthi 2024: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தயாரான இஸ்கான் கோயில்! பக்தர்களுக்கு அழைப்பு!
September Mithunam Rasi Palan: மின்னப்போகும் மிதுன ராசி! பிறக்கப்போகுது நல்ல காலம்! செப்டம்பர் மாத பலன்கள் இதுதான்!
September Mithunam Rasi Palan: மின்னப்போகும் மிதுன ராசி! பிறக்கப்போகுது நல்ல காலம்! செப்டம்பர் மாத பலன்கள் இதுதான்!
Unified Pension Scheme: அரசு ஊழியர்களே! 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்!
Unified Pension Scheme: அரசு ஊழியர்களே! 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்!
Embed widget