மேலும் அறிய

மக்கள் மனசு வைத்தால் பொது முடக்கம் வராமல் தடுக்க முடியும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

’’வள்ளலார் கூற்றுப்படி தனித்திருக்கனும், விழித்திருக்கனும், கொரோனாவை தடுக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்’’

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் எத்தனை சதவீதம் தடுப்பூசிகள் போட்டுள்ளனர், கொரோனா தடுப்ப மையங்கள் எத்தனை உள்ளது, கொரோனா தொற்றை கட்டுபடுத்த எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது என கேட்டறிந்தார். மேலும் தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதோடு மருத்துவமனைகளில் பொது மக்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என கூறினார். 

மக்கள் மனசு வைத்தால் பொது முடக்கம் வராமல் தடுக்க முடியும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
 
இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர, சந்தைப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தும் முகாமினை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதனையடுத்து செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை அமைச்சர் பன்னீர்செல்வம், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வெளி வர வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்து வருகிறார்கள். கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கையை முதலமைச்சர் தீவிரமாக கவனித்து வருகிறார். இதனை அந்ததந்த பகுதியில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

மக்கள் மனசு வைத்தால் பொது முடக்கம் வராமல் தடுக்க முடியும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
 
ஆகவே முழு ஊரடங்கை சந்திக்க கூடிய ஒரு நிலைமை எழாது என்று, நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால், பொதுமுடக்கம் வராமல் தடுக்க முடியும். வள்ளலார் கூற்றுப்படி தனித்திருக்கனும், விழித்திருக்கனும், கொரோனாவை தடுக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன், கூடுதல் ஆட்சியர் மரு.வைத்திநாதன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.மலர்விழி வள்ளல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சியே சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget