மேலும் அறிய

மக்கள் மனசு வைத்தால் பொது முடக்கம் வராமல் தடுக்க முடியும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

’’வள்ளலார் கூற்றுப்படி தனித்திருக்கனும், விழித்திருக்கனும், கொரோனாவை தடுக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்’’

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் எத்தனை சதவீதம் தடுப்பூசிகள் போட்டுள்ளனர், கொரோனா தடுப்ப மையங்கள் எத்தனை உள்ளது, கொரோனா தொற்றை கட்டுபடுத்த எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது என கேட்டறிந்தார். மேலும் தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதோடு மருத்துவமனைகளில் பொது மக்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என கூறினார். 

மக்கள் மனசு வைத்தால் பொது முடக்கம் வராமல் தடுக்க முடியும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
 
இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர, சந்தைப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தும் முகாமினை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதனையடுத்து செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை அமைச்சர் பன்னீர்செல்வம், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வெளி வர வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்து வருகிறார்கள். கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கையை முதலமைச்சர் தீவிரமாக கவனித்து வருகிறார். இதனை அந்ததந்த பகுதியில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

மக்கள் மனசு வைத்தால் பொது முடக்கம் வராமல் தடுக்க முடியும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
 
ஆகவே முழு ஊரடங்கை சந்திக்க கூடிய ஒரு நிலைமை எழாது என்று, நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால், பொதுமுடக்கம் வராமல் தடுக்க முடியும். வள்ளலார் கூற்றுப்படி தனித்திருக்கனும், விழித்திருக்கனும், கொரோனாவை தடுக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன், கூடுதல் ஆட்சியர் மரு.வைத்திநாதன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.மலர்விழி வள்ளல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சியே சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
மதுரை காந்தி அருங்காட்சியகம்: விரைவில் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரை காந்தி அருங்காட்சியகம்: விரைவில் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget