மேலும் அறிய

கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

தாய் மற்றும் கள்ளக் காதலன் சேர்ந்து 2 வயது குழந்தையை அடித்துக் கொன்ற கொடூரம் - சிக்கியது எப்படி ?

திருமணம் மீறிய உறவு

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கீசார பகுதியில் வசித்து வருபவர் சுவாமி. இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் இவருக்கும் தீகுலா கிராமத்தை சேர்ந்த ஜோதி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் 6 வயதில் ஒரு மகளும் 2 வயதில் ஹரிகிரிஷ்ணா என்ற மகனும் இருந்தனர்.

திருமணமான சில மாதங்களிலேயே ஜோதிக்கு , தீகுலா கிராமத்தை சேர்ந்த நவீன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. சுவாமி அடிக்கடி வேலைக்கு வெளியூருக்கு செல்லும் நிலையில் குழந்தைகளுடன் வீட்டில் இருக்கும் ஜோதி தனது கள்ளக் காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

தூக்கி வீசப்பட்ட குழந்தை

வழக்கம் போல கடந்த (மே 29) ஆம் தேதி சுவாமி வேலைக்கு சென்றிருந்த நிலையில் ஜோதி தனது கள்ளக் காதலனை வீட்டிற்கு அழைத்திருக்கிறார். பின்னர் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் ஜோதியின் இரண்டாவது மகன் ஹரிகிருஷ்ணன் தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோதி மற்றும் அவரது கள்ளக் காதலன் நவீன் ஆகிய இருவரும் சேர்ந்து குழந்தையை சரமாரியாக தாக்கி தூக்கி வீசியதில் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

குழந்தை உயிரிக்கு போராடுவதை அறிந்து அதிர்ச்சியடைந்த இருவரும் உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சி.சி.டி.வியில் சிக்கிய காட்சி

இதனை தொடர்ந்து தனது கணவனுக்கு போன் செய்த ஜோதி குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த சுவாமி மனைவி கூறியதை நம்பி இறுதி சடங்கு செய்து குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்திருக்கிறார்.

பின்னர் வழக்கம் போல வேலைக்கு சென்று வந்த சுவாமிக்கு நாளடைவில் ஜோதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டின் சுவரில் இருந்த ரத்தக் கறையை பார்த்து அதிர்ச்சியடைந்த சுவாமிக்கு குழந்தையின் மரணத்திலும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள வீடுகளில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்திருக்கிறார். அதில் குழந்தை இறந்ததாக சொல்லப்படும் நாளில் ஜோதி நவீன் உடன் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்தது தெரிய வந்துள்ளது.

தலைமறைவான கள்ளக் காதலன்

ஆத்திரமடைந்த சுவாமி இது குறித்து தனது மனைவி ஜோதியிடம் கேட்ட போது முன்னுக்கு பின்னாக பதிலளித்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து கடந்த (ஜூன் 19) காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் (ஜூன் 20) ஆம் தேதி ஜோதியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜோதியை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கள்ளக் காதலன் நவீனை தேடி வருகின்றனர். மேலும் குழந்தையில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 18) மின்தடை! மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 18) மின்தடை! மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
காஞ்சிபுரத்திற்கு வந்த செம குட் நியூஸ்: ரூ.2.96 கோடியில் புதிய திட்டங்கள்.. அமைச்சர்கள் அதிரடி ஓப்பனிங்!
காஞ்சிபுரத்திற்கு வந்த செம குட் நியூஸ்: ரூ.2.96 கோடியில் புதிய திட்டங்கள்! அமைச்சர்கள் ஓப்பனிங்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
சர்க்கரை புண் , தீக்காயங்களுக்கு தீர்வு !! ஓமந்தூரார் மருத்துவமனையில் அதிநவீன இலவச சிகிச்சை
சர்க்கரை புண் , தீக்காயங்களுக்கு தீர்வு !! ஓமந்தூரார் மருத்துவமனையில் அதிநவீன இலவச சிகிச்சை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
US Iran War: பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
MG Motor NEV Architecture: டாடா, மஹிந்திராவின் தூக்கத்தை கெடுக்கப் போகும் எம்ஜி; EV, Hybrid கார்களில் புதிய தொழில்நுட்பம்; அது என்ன.?
டாடா, மஹிந்திராவின் தூக்கத்தை கெடுக்கப் போகும் எம்ஜி; EV, Hybrid கார்களில் புதிய தொழில்நுட்பம்; அது என்ன.?
Best Speed for Car Mileage: ‘மைலேஜை தீர்மானிக்கும் வேகம்‘; எந்த வேகத்தில் கார் ஓட்டினால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் தெரியுமா.?
‘மைலேஜை தீர்மானிக்கும் வேகம்‘; எந்த வேகத்தில் கார் ஓட்டினால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் தெரியுமா.?
Vanni Arasu:
Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!
Embed widget