கரூரில் இரு சமூகப் பிரச்னை சுமுகம் - வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திறப்பு
ஊர்களுக்கு முன்மாதிரியாக சமூக நீதி நிலைநாட்டும் வகையில் ஒற்றுமையை பேணிக்காக்கும் வகையில் வீரணம் பட்டி கிராம மக்கள் உள்ளனர்.

வீரணம்பட்டி காளியம்மன் கோயில் விகாரத்தில் பூட்டின் சாவி இல்லாததால் கடப்பாரை மற்றும் சுத்தியலால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பூட்டு உடைக்கப்பட்டு, கோயில் திறக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட வீரணம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் கடந்த எட்டாம் தேதி ஒரு சமூகம் கோவிலுக்குள்ளே வந்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் இரு தரப்பினருக்கும் பிரச்சினை நடைபெற்று வந்தது. போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு இரு சமூக முக்கியஸ்தர்கள் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாததால் குளித்தலை ஆர்டிஓ தலைமையில் வீரணம்பட்டி காளியம்மன் கோவில் பூண்டி சீல் வைக்கப்பட்டது. ஊர் மக்கள் சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வந்தனர். தொடர்ந்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு தரப்பினர் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை சுமுக முடிவு எட்டப்பட்ட நிலையில் இன்று கோவில் திறப்பதற்கு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வீரணம்பட்டி காளியம்மன் கோவில் திறக்க கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதம் வருகை தந்தனர். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வந்தனர். மேலும் பாதுகாப்புக்காக வஜ்ரா வாகனமும் நிறுத்திவைக்கப்பட்டது. பூட்டி சீல் வைக்கப்பட்ட கோவிலில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சீல் வைக்கப்பட்ட பூட்டை திறப்பதற்கு முறையான சாவி இல்லாததால் காவல்துறை உதவியுடன் பூட்டை கடப்பாரை மற்றும் சுத்தியால் தாக்கப்பட்டு உடைத்து திறந்தனர். இருப்பினும்அபிஷேகம் செய்வதற்கு ஒரு தரப்பினர் மட்டுமே உள்ளே வந்தனர். மற்றொரு தரப்பினர் வெளியே அமைதியாக காத்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில் ஊர் முக்கியஸ்தரான கிராம ஊராட்சி மன்ற தலைவர் கோவிலுக்குள்ளே வருகை புரிந்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளுடன் அபிஷேகம் நடைபெற்றது சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், “ஊர்களுக்கு முன்மாதிரியாக சமூக நீதி நிலைநாட்டும் வகையில் ஒற்றுமையை பேணிக்காக்கும் வகையில் வீரணம் பட்டி கிராம மக்கள் உள்ளனர். கோவில் பிரச்சனையில் சுமுக உடன்பாடு எட்டப்படுள்ளது. கிராம வளர்ச்சி பணிக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





















