மேலும் அறிய

கரூர்: அரசுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு - வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு..!

சட்டப்பிரிவு 78 மற்றும் 79 படி வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையரின் கோர்ட் உத்தரவுகளில் கூறியுள்ள படி ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா காதப்பாறை கிராமம் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள 23 ஆக்கிரமிப்பாளர்களை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் இடத்தில் இருந்து, இந்து சமய அறநிலைத்துறை சட்டப்பிரிவு 78 மற்றும் 79 படி வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையரின் கோர்ட் உத்தரவுகளில் கூறியுள்ள படி ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி தனலட்சுமி, துரைசாமி, செல்லப்பன், செல்லம்மாள், மாரிமுத்து, சதாசிவம், சுப்பிரமணியன், கிருஷ்ணன் உட்பட 23 பேருக்கு இந்து சமய அறநிலைத்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.



கரூர்: அரசுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு - வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு..!

23 ஆக்கிரமிப்பாளர்களும் தங்கள் வசம் ஆக்கிரமிப்பில் வைத்துள்ள சொத்துக்களை உடனே கோயில் நிர்வாகத்துடன் ஒப்படைக்க வேண்டும். தவறினால் காவல்துறை மற்றும் இதர துறைகள் உதவியுடன் இந்த இடங்களை சுவாதீனம் எடுக்கப்பட்டு, கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் 23 இடத்தின் உரிமையாளர்களுக்கும் கடந்த ஜூலை மாதம் அனுப்பப்பட்டது. இந்த இடம் எங்களுக்கு முறைப்படி சொந்தமான இடம். எனவே இந்த நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்று அப்பாவி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் போலீசார் உதவியுடன் மேற்கண்ட 23 வீடுகளை கையகப்படுத்திட  வெண்ணைமலை பகுதிக்கு அதிகாரிகள் காலை வந்தனர். தயார் நிலையில் புல்டௌசர்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மின்வாரிய ஊழியர்கள் சிலரும் மின்னிணைப்பு துண்டிக்க தயார் நிலையில் காத்திருந்தனர். பகுதியில் வசிக்கும் மக்கள், கடைக்காரர்கள் என்று 400க்கும் மேற்பட்டவர்கள் வெண்ணைமலைக்கோயில் அருகில் கட்டப்பட்டு வரும் மண்டபம் அருகில் அறநிலையத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் விஏஓ காமராஜ் தலைமையில் கூடினர்.


கரூர்: அரசுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு - வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு..!

தொடர்ந்து அங்கு வந்த கரூர் ஆர்டிஓ ரூபினா, டிஎஸ்பி தேவராஜ், மண்மங்கலம் தாசில்தார் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கலெக்டரை சந்திக்க சென்றுள்ளனர். உங்கள் கோரிக்கைகளை தெரிவித்தால் நாங்கள் கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம் என்றனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள், நோட்டீஸ் பெற்றவர்கள், பெறாதவர்கள் என்று அனைவரும் தங்கள் கருத்துக்களை அதிகாரியிடம் கூறினார். பல தலைமுறையாக இந்த இடத்தில் வாழ்ந்து வருகிறோம். நிலத்தை முறைப்படி பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் அரசுக்கு உரிய கட்டணத்தை கட்டித்தான் இந்த நிலத்தை வாங்கினோம். பல்வேறு வங்கிகளில் முறையாக விண்ணப்பித்து கடன் பெற்றும், உள்ளாட்சி அமைப்புகள் விண்ணப்பித்து கட்டிடம் கட்ட அனுமதி பெற்றும், மின்வாரியத்தில் விண்ணப்பித்து மின் இணைப்பு பெற்றும் சட்டப்படி வீடு கட்டி வசித்து வருகின்றோம்.


கரூர்: அரசுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு - வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு..!

இந்நிலையில், இடம்  திடீரென்று கோயிலுக்கு சொந்தமானது, காலி செய்யுங்கள் என்று கூறினால், நாங்கள் என்ன செய்வது. நாங்கள் இந்த இடம் வாங்க செலுத்திய தொகை, கட்டிடம் கட்டிய தொகை போன்றவற்றிற்கு யார் பொறுப்பு. இந்த இழப்புகளை எப்படி ஈடு செய்ய முடியும். அரசால் அங்கீகரிக்கப்பட்டு வீடு கட்டி வசித்து வரும் நிலையில், அந்த அரசாங்கமே இந்த இடம் உங்களுடையது அல்ல. அறநிலைத்துறைக்கு சொந்தம் என்று கூறுவது எவ்வகையில் நியாயம் என்றனர். மக்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட அதிகாரிகள், இன்று ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற எந்த செயல்பாடும் இருக்காது என்று உறுதியளித்தனர். பின்னர் மக்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வெண்ணைமலைப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget