மேலும் அறிய

கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த மருமகன், மாமியார் மீது தாக்குதல் - கரூரில் அதிர்ச்சி

குருசாமி நடத்தி வந்த குவாரியால் எங்களால் நிம்மதியாக தொழில் செய்ய இயலவில்லை. இதனால் நாங்கள் குடியிருப்பை அருகில் உள்ள புன்னம் பகுதிக்கு மாற்றி விட்டோம்.

கரூர் அருகே கல் குவாரியை செயல்படாவிடாமல் தடுத்த மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பௌத்திரம் அருகே உள்ளது குரும்பபட்டி கிராமம். இப்பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன் வயது 48. இவருக்கு சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் அப்பகுதியில் ஆடு மாடுகளை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். நிலத்தின் அருகாமையில் குவாரி நிறுவனத்தை குருசாமி என்பவர் நடத்தி வந்தார்.

 


கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த மருமகன், மாமியார் மீது தாக்குதல் - கரூரில் அதிர்ச்சி

குவாரியில் கற்களை வெட்டி எடுப்பதற்காக அதிக சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை பயன்படுத்தி வெடிப்பதால் குவாரியில் இருந்து கற்கள் சாமிநாதன் நிலத்திலும், அருகில் இருந்த வீட்டின் மீதும் விழுந்ததால் ஆடு, மாடுகள் உயிரிழந்தும், வீடு சேதம் அடைந்தும் போனது. பலமுறை அதிக சக்தி வாய்ந்த வெடிகளை வெடிக்க வேண்டாம் என சாமிநாதன் கேட்டுக் கொண்டும் குருசாமி ஏற்காமல் தொடர்ந்து அதிக சக்தி வாய்ந்த வெடிகளை பயன்படுத்தி வந்தார்.

 

 


கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த மருமகன், மாமியார் மீது தாக்குதல் - கரூரில் அதிர்ச்சி

இதனால், கனிமவளத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையில் புகார் அளித்தார் சாமிநாதன். மேலும், குருசாமி நடத்தி வந்த குவாரிக்கு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லைசன்ஸ் முடிந்துவிட்டது. சாமிநாதன் அளித்த புகாரால் மீண்டும் குவாரியை புதுப்பிக்க முடியாமல் போனது. தனது குவாரி செயல்படாமல் போனதற்கு சாமிநாதன் தான் காரணம் என பலமுறை சாமிநாதனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் குருசாமி.

 

 


கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த மருமகன், மாமியார் மீது தாக்குதல் - கரூரில் அதிர்ச்சி

இந்த நிலையில், சாமிநாதன் இடத்தில் நேற்று அத்துமீறி கம்பி வேலி எடுக்க குருசாமி முயன்றுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் குருசாமி அவரது மகன் சதீஷ்குமார், அவரது நண்பர் இந்திரமூர்த்தி மற்றும் அடியாட்களுடன் கடப்பாரை, கம்பி, கட்டை போன்ற ஆயுதங்களால் சாமி நாதனை தாக்கி உள்ளனர். இதனை தடுக்க வந்த சாமிநாதனின் மாமியார் பர்வதம் வயது 65 என்பவரையும் தாக்கி படுகாயம் ஏற்படுத்தினர்.

 


கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த மருமகன், மாமியார் மீது தாக்குதல் - கரூரில் அதிர்ச்சி

 

காயமடைந்த இருவரும் தற்போது கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்த காவல்துறையினர் இருவரிடமும் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து சாமிநாதனின் மனைவி சிவாராணி செய்தியாளரிடம் தெரிவிக்கும் போது, குருசாமி நடத்தி வந்த குவாரியால் எங்களால் நிம்மதியாக தொழில் செய்ய இயலவில்லை. இதனால் நாங்கள் குடியிருப்பை அருகில் உள்ள புன்னம் பகுதிக்கு மாற்றி விட்டோம்.

பலமுறை அறிவுறுத்தியும், வேண்டி கேட்டுக் கொண்டும் குருசாமி கேட்காமல் இருந்ததால் புகார் அளித்தோம். புகார் அளித்ததால் உங்களால் தான் குவாரி செயல்பட முடியாமல் போனது என, எங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தார். அதன் தொடர்ச்சியாக கம்பி வேலி எடுக்கும் போது ஏற்பட்ட பிரச்சனையில் கடுமையாக தாக்கி உள்ளனர். எனவே, அரசு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget