மேலும் அறிய

உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு தரவில்லை - கரூரில் விவசாயிகள் போராட்டம்

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர் அருகே உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க நிலம் கையப்படுத்த உரிய இழப்பீட்டு தொகை தரவில்லை எனக் கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 


உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு தரவில்லை - கரூரில் விவசாயிகள் போராட்டம்

கரூர் மாவட்டம், ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரை தோட்டம் வரை 110 kv தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தால் நிறுவப்பட்ட பாதை செல்லும் வழியில் உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு வழங்காமலும், நில மதிப்பு நிர்ணயம் செய்யாமலும் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு, பனைமரம், வேளாம் மரம், வேப்பமரம், முருங்கை மரம், கொழுக்கட்டை புல், கிளுவை  உயிர்வேலி மற்றும் காய்கறி செடிகளுக்கான இழப்பீடு வழங்காமல் சட்ட விரோதமாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு விட்டன. இதனை கண்டித்தும், இழப்பீடு வழங்க வேண்டியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கரூர் மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா தனது தோட்டத்தில் இழப்பீடு பெறாத  பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 21ம் தேதி தொடங்கியுள்ளார். 

 


உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு தரவில்லை - கரூரில் விவசாயிகள் போராட்டம்

 

முறையான இழப்பீடு பெறாத விவசாயிகள் தென்னிலையை சார்ந்த ராஜா, சீத்தக்காட்டை சார்ந்த கலையரசி, மீனாட்சிவலசை சார்ந்த ராதாமணி, வேலாயுதம்பாளையத்தை சார்ந்த சின்னசாமி ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அருகில் உள்ள கிராமங்களை சார்ந்த பொதுமக்கள், விவசாய அமைப்பினர், தன்னார்வலர்களும் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அளித்தனர். 

 


உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு தரவில்லை - கரூரில் விவசாயிகள் போராட்டம்

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட 14 ஆவணங்களை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காட்ட வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியரும், மதுரை உயர்நீதிமன்றமும் வலியுறுத்தியும், அதை சமர்ப்பிக்காமல் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் செயல்படுவதாக கோரிக்கை மனுவினை அழித்துவிட்டு வெளியே வந்த ஈசன் முருகசாமி தெரிவித்தார்.

 

 

 

தலைப்பு செய்திகள்

நல்ல ஸ்கூல்.. தலைமையாசிரியர் அறையில் பீர் பாட்டில்.. ஆய்வு செய்த தவெக எம்.எல்.ஏ., அதிர்ச்சி!
நல்ல ஸ்கூல்.. தலைமையாசிரியர் அறையில் பீர் பாட்டில்.. ஆய்வு செய்த தவெக எம்.எல்.ஏ., அதிர்ச்சி!
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருதி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருதி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Embed widget