மேலும் அறிய

கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரிப்பு

ஓடைகள் கட்டப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவு நீரை மேற்கண்ட ஏழு பாசன நீர் வழிகள் வடிய விடப்பட்டன. அவை நீரின் வேகத்தால் தயக்கமின்றி வெளியேற்றப்பட்டன.

கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து, சற்று அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 9,039 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 8:00 மணி நிலவரம் படி வினாடிக்கு, 9,459 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் 8,339 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு  காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 676 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட, தண்ணீரின் அளவு வினாடிக்கு, 433 கனஅடியாக இருந்தது. 

கரூர் அருகே, பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 374 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அணை நீர்மட்டம், 88.46 அடியாக இருந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.59 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரிப்பு

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.43 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

குளித்தலை நகராட்சியில் பாசன வாய்க்கால் சீரமைக்க முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை

குளித்தலை நகராட்சியில் பாசன வாய்க்கால் சீரமைக்கவும், பாதாள சாக்கடை அமைக்கவும் காவேரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவரும் அன்பில் தர்மலிங்கம், வேளாண் கல்லூரி முன்னாள் முதல்வருமான ஜெயராமன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, அனைத்து நகரங்களிலும் "தூய்மையான சுற்றுச்சூழல்" ஏற்படுத்துவது என்பது தமிழ்நாடு அரசின் பிரதான திட்டம் ஆகும். குளித்தலை நகராட்சி குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் கசடு கழிவு நீர் மறுசுழற்சி மேலாண்மை திட்டத்தினையும் செயல்படுத்த வேண்டும்.


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரிப்பு

பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை முடித்து அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்புகள் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிலையில் தென்கரை வாய்க்காலில் இருந்து தென்கரை வாய்க்கால் 9 பாசன வாய்க்கால்கள் அல்லது கிளை நீர் வழிகள் குளித்தலை நகரத்திற்குள் பாய்ந்து செல்கின்றன. இந்த ஒன்பது பாசன வாய்க்கால்கள் பெரும்பாலும் இயக்கமில்லா பயன்பாடு உள்ளவைகளாகவும், வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளவைகளாகவும் உள்ளன. முன்பு ஓடைகள் கட்டப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவு நீரை மேற்கண்ட ஏழு பாசன நீர் வழிகள் வடிய விடப்பட்டன. அவை நீரின் வேகத்தால் தயக்கமின்றி வெளியேற்றப்பட்டன. ஆனால் தற்போது குளித்தலை நகரத்தின் மக்கள் தொகை அதிகரித்து விட்டதாலும், கழிவு நீரின் அளவு அதிகரித்து விட்டதாலும், வடிகாலாக இருந்த பாசன நீர் வழிகளில் தூர்படிந்து விட்டன. இதனால் பாசன நீரோட்டம் முழுமையாக இழக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 603.71 ஏக்கர் நிலங்கள் பாசனம் இழந்து பல விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். இந்த பாசன நீரோட்டம் பாதிக்கப்பட்டதுடன் குளித்தலை நகரம் கழிவுநீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தி மையங்களாக செயல்பட்டு சுகாதார கேடுகளை ஏற்படுத்துகின்றன. எனவே சுகாதாரப் பொறியியல் தொழில்நுட்பத்துடன் ஏற்கனவே உள்ள கழிவு நீர் கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்து கழிவு நீரை குறிப்பிட்ட இடங்களில் சேகரித்து மறுசுழற்சி செய்து பொதுமக்களின் சுகாதாரங்களை காத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

குளித்தலை நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் கசடு கழிவு நீர் மறுசுழற்சி மேலாண்மை திட்டத்தினையும் செயல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை முடித்து அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்புகள் ஏற்படுத்தவும், பாதாள சாக்கடை மற்றும் கசடு கழிவு மேலாண்மை திட்ட பராமரிப்புக்கென தேவையான எண்ணிக்கைகளில் நவீன உபகரணங்களை வாங்கவும் தக்க திட்டங்களை தமிழ்நாடு அரசின் வரும் 2023-2024 நிதியாண்டில் செயல்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோருக்கும் இந்த கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மயில் வடிவில் அம்பாள் பூஜித்த தலம்... கருவறையில் கமழ்ந்த 108 மூலிகை நறுமணம்: மயூரநாதர் ஆலய அற்புதம்!
மயில் வடிவில் அம்பாள் பூஜித்த தலம்... கருவறையில் கமழ்ந்த 108 மூலிகை நறுமணம்: மயூரநாதர் ஆலய அற்புதம்!
"இனிமேலும் தற்காலிகமா?" – முதல்வர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதியை நம்பிப் தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்!
மாங்கனி மழையில் நனைந்த காரைக்கால் வீதிகள்: பிச்சாண்டவர் வீதியுலாவில் திரண்ட பக்தி வெள்ளம்!
மாங்கனி மழையில் நனைந்த காரைக்கால் வீதிகள்: பிச்சாண்டவர் வீதியுலாவில் திரண்ட பக்தி வெள்ளம்!
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Trump on Iran: அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Upcoming Affordable EV Cars: ஒரே சார்ஜில் 400 கிமீ ரேஞ்ச்; மலிவு விலை; அதிரடியாக களமிறங்கும் ஹூண்டாய், கியா; EV அறிமுகம் எப்போ.?
ஒரே சார்ஜில் 400 கிமீ ரேஞ்ச்; மலிவு விலை; அதிரடியாக களமிறங்கும் ஹூண்டாய், கியா; EV அறிமுகம் எப்போ.?
Tata Sierra EV: டாடா சியரா இவி வாங்க பிளான் பண்றீங்களா.? உட்புற அம்சங்கள், பவர், சிறப்பம்சங்கள்; ஃபுல் டீட்டெய்ல்ஸ் இதோ
டாடா சியரா இவி வாங்க பிளான் பண்றீங்களா.? உட்புற அம்சங்கள், பவர், சிறப்பம்சங்கள்; ஃபுல் டீட்டெய்ல்ஸ் இதோ
Embed widget