மேலும் அறிய

கரூரில் கட்டப்பட்டு வந்த விநாயகர் கோயில் இரவோடு இரவாக இடித்து அகற்றம் - காரணம் என்ன?

கரூரில் அரசு அலுவலக வளாகத்தில் அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமானப் பணி - பல்வேறு சமூக அமைப்பினரின் புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக இடித்து அகற்றம்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதிபாளையத்தில், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் புதிதாக 5 அடி அகலம், 5 அடி நீளம், சுமார் 12 அடி உயரத்திற்கு கோவில் போன்ற அமைப்புடன், கடந்த ஒரு மாத காலமாக கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. 4 அடி உயரத்திற்கு பீடம் அமைக்கப்பட்டு, அதில் நான்கு புறமும் சிமெண்ட் பில்லர் எழுப்பப்பட்டு மேற்பரப்பில் கான்கிரீட் மேற்கூரை  போடப்பட்டது.

 


கரூரில் கட்டப்பட்டு வந்த விநாயகர் கோயில் இரவோடு இரவாக இடித்து அகற்றம் - காரணம் என்ன?

 

இந்த அமைப்பு இந்து மத வழிபாட்டு தளத்திற்கான விநாயகர் கோவில் கட்டுமானம் என தகவல் வெளியானதை அடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், சாமானிய மக்கள் நலக்கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி வேலுச்சாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமாவதி உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

 


கரூரில் கட்டப்பட்டு வந்த விநாயகர் கோயில் இரவோடு இரவாக இடித்து அகற்றம் - காரணம் என்ன?

அப்போது அரசு அலுவலக வளாகத்தில் மத வழிபாட்டு தளம் கட்டக் கூடாது என 1998-இல் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற பொதுநல வழக்கிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு, நீதிமன்ற ஆணையும் உள்ளதால், கட்டுமான பணியை நிறுத்தி, இடித்து அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

 

 


கரூரில் கட்டப்பட்டு வந்த விநாயகர் கோயில் இரவோடு இரவாக இடித்து அகற்றம் - காரணம் என்ன?

அப்போது ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் அதிகாரிகள் அலுவலக வளாகத்தில் மத வழிபாட்டு தளம் கட்டப்படவில்லை எனவும், கார் நிறுத்துவதற்கும், பொதுமக்கள் இளைப்பாறுவதற்காக நிழல் பந்தல் போடுவதற்கான ஆரம்பகட்ட வேலைகள்  நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். 

ஆனால், கட்டுமான பணிக்கான அமைப்பு இந்து மத வழிபாட்டு தளத்திற்கான அனைத்து அடையாளங்களுடன் தெளிவாக இருப்பதால், அரசாணை மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்று வரும் கட்டுமான பணியை நிறுத்தி, இடித்து அகற்ற வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோரிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


கரூரில் கட்டப்பட்டு வந்த விநாயகர் கோயில் இரவோடு இரவாக இடித்து அகற்றம் - காரணம் என்ன?

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களிடம் கேட்ட போது, இது ஓட்டுநர்களுக்கான ஓய்வு எடுப்பதற்காக ஷெட் போடுவதாக தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் வருகை தந்தால் சாப்பிட ஏற்பாடு செய்வதாக தெரிவித்ததாகவும், கார் நிறுத்தும் இடம் என மாற்றி மாற்றி சொல்லி வருகின்றனர். இந்த பணிக்கான ஒப்பந்தம், மதிப்பீடு, ஒப்பந்ததாரர் யார் என கேள்வி எழுப்பியதற்கு பதில் தர மறுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் இரவு சமூக ஆர்வலர்களின் புகார் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பொக்ளின் இயந்திரம் மூலம் அந்த கட்டுமானத்தை அதிகாரிகள் இடித்து அகற்றியுள்ளனர். 

 


கரூரில் கட்டப்பட்டு வந்த விநாயகர் கோயில் இரவோடு இரவாக இடித்து அகற்றம் - காரணம் என்ன?

இந்த கட்டுமானத்தில் ஈடுபட்டது யார், அதன் ஒப்பந்ததாரர் யார், இதற்கு எவ்வளவு நிதி செலவிடப்பட்டது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கூண்டோடு தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், தவறும்பட்சத்தில் முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு செல்வோம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget