மேலும் அறிய

திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்

இளைஞர் அணி நிர்வாகிகள் ஒரே மாதிரியான சீருடையிலும், இளம்பெண்கள் ஒரே மாதிரியான சுடிதார் உடையிலும், பெண்கள் ஒரே மாதிரியான புடவையிலும், ஆண்கள் ஒரே மாதிரியான கட்சி வேட்டி சட்டையிலும் கலந்து கொள்கிறார்

கரூரில்  திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் பணிகள்.

தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம்  அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை ஒன்றிணைத்து இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 


திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்


அதன்படி கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியில்  நாளை 17-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.  கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வரவேற்று பேசுகிறார்.

 


திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்


பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். விழாவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.


திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்

 

 

இந்த விழாவுக்காக கோடங்கிபட்டி பகுதியில் 50 ஏக்கர் நிலத்தில் பத்து நாட்களுக்கு முன்பு பந்த கால் நடப்பட்டு, 200 அடி அகலம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமான மேடை ஒரு லட்சம் நபர்கள் அமர்வதற்கு இருக்கைகள், தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். மேலும் 67 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஒரே மாதிரியான டீ சர்ட் சீருடையுலும், இளம்பெண்கள் ஒரே மாதிரியான சுடிதார் உடையிலும், பெண்கள் ஒரே மாதிரியான புடவையிலும், ஆண்கள் ஒரே மாதிரியான கட்சி வேட்டி சட்டையிலும் கலந்து கொள்கிறார்.

 


திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்

விழாவில் பங்கேற்கும் முதல்வர் நாளை விமானம் மூலம் திருச்சி வருகை தந்து அங்கு உறுதிமொழி ஏற்ற பின் அங்கிருந்து கார் மூலம் கரூர் வருகை தருகிறார். கரூர் தான்தோன்றி மலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.  அதன் பின்னர் மாலை 4 மணிக்கு புறப்பட்டு முப்பெரும் விழா நடைபெறும் மேடைக்கு வருகை தர உள்ளார்.

 


திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்

முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் வருகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழா கோலம் போல் காட்சி அளிக்கிறது குறிப்பாக கரூர் மாநகர் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் போஸ்டர்கள் பேனர்கள் கட்சி கொடி கம்பங்கள் என திமுகவினர் அசத்தியுள்ளனர். அதேபோல் வாழை தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கட்சி கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதல்வரின் வருகையொட்டி கரூரில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 


திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்

கொங்கு மண்டலத்தை பொருத்தவரை செந்தில் பாலாஜி என்றாலே பிரம்மாண்டம் என்று முதல்வர் கூறி வரும் நிலையில் தற்போது திமுக முப்பெரும் விழா கரூரில் நாளை நடைபெற உள்ள நிலையில் பல்வேறு பணிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தலைப்பு செய்திகள்

Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
ஜாதி, வருமானச் சான்றிதழ் இனி சீக்கிரம் கிடைக்கும் !! வருவாய் துறையின் புதிய அதிரடி மாற்றம்
ஜாதி, வருமானச் சான்றிதழ் இனி சீக்கிரம் கிடைக்கும் !! வருவாய் துறையின் புதிய அதிரடி மாற்றம்
Keerthana: அரசுப்பள்ளி அவலம்.. கொந்தளித்த அமைச்சர் கீர்த்தனா.. ரவுண்டு கட்டிய அன்பில், உதயநிதி!
Keerthana: அரசுப்பள்ளி அவலம்.. கொந்தளித்த அமைச்சர் கீர்த்தனா.. ரவுண்டு கட்டிய அன்பில், உதயநிதி!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Embed widget